Don't Miss!
- News சென்னையில் பிரபல ‛பப்’ மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து.. மெட்ரோ பணிகள் காரணமா! பகீர் தகவல்
- Automobiles கண்ண மூடிட்டு ஹோண்டா டூவீலர்களை வாங்கும் இந்தியர்கள்! இந்த விஷயம் தெரிஞ்சா விடிஞ்சதும் ஷோரூம்லதான் இருப்பீங்க!
- Sports ரியான் பராக் இல்லடா.. இது பேட்ட பராக்.. கடைசி 5 ஓவரில் 77 ரன்கள்.. டெல்லிக்கு ஷாக் கொடுத்த ராஜஸ்தான்
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Lifestyle முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
சித்தார்த்துக்கும் எனக்கும் காதலோ, கத்தரிக்காயோ இல்லை: தீபா சன்னதி
பெங்களூர்: சித்தார்த்துக்கும், தனக்கும் இடையே காதல் கிடையாது என்றும், சித்தார்த்-சமந்தா பிரிய தான் காரணம் இல்லை என்றும் நடிகை தீபா சன்னதி தெரிவித்துள்ளார்.
சித்தார்த், சமந்தா காதல் முறிய நடிகை தீபா சன்னதியும் ஒரு காரணம் என்று செய்திகள் வெளியாகின. தீபா சித்தார்த்துடன் சேர்ந்து எனக்குள் ஒருவன் படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் தான் இந்த செய்திகள் வெளியாகின.
இது குறித்து தீபா கூறுகையில்,
நான் பெங்களூரில் வசித்து வருவதால் இந்த செய்தி பற்றி சில நாட்களுக்கு முன்பு தான் தெரிய வந்தது. இதை கேள்விப்பட்டு அதிர்ச்சி அடைந்தேன். இதெல்லாம் யாரோ இந்த செய்தியை பரபரப்பாக்க கற்பனையை சேர்த்து கூறியது. படப்பிடிப்பு முடிந்த பிறகு நான் சித்தார்த்தை தொடர்பு கொண்டதே இல்லை. எங்களுக்குள் காதல் எல்லாம் இல்லை.
படப்பிடிப்பு முடிந்த பிறகு படத்தின் விளம்பர நிகழ்ச்சியில் தான் நாங்கள் சந்தித்தோம். இது என் முதல் தமிழ் படம் என்பதால் அவர் எனக்கு உதவினார். அவ்வளவு தான். அவரின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றி எனக்கு எதுவும் தெரியாது. முன்பு எல்லாம் வதந்திகளை கேட்டு காயம் அடைந்தேன். ஆனால் தற்போது பழகிவிட்டது என்று கூறி சிரித்தார்.
முன்னதாக தீபாவின் பெயர் ஆர்யாவுடன் அடிபட்டது என்பது குறிப்பிடத்தக்கது.