Don't Miss!
- Technology இப்படியொரு புரொஜெக்டர் யாரும் பார்த்ததில்லை.. 32GB மெமரி.. 1080P ரெசல்யூஷன்.. எந்த மாடல்? என்ன விலை?
- Lifestyle தினமும் 10 பவுன் தங்கத்தை தூசியாக உமிழும் அதிசய எரிமலை... இந்த எரிமலையா இல்ல தங்கச்சுரங்கமானே தெரிலயே...!
- News இதுக்கு எதுக்கு தட்கலில் டிக்கெட் புக் பண்ண வேண்டும்? ஏசி 2ம் வகுப்பு பெட்டியிலேயே இதுதான் நிலைமை
- Automobiles ஹெல்மெட் போடாமல் பைக்கில் போன விஜய் சேதுபதி! ஓட்டு போட வந்த இடத்தில் மானமே போச்சு!
- Travel சென்னையிலிருந்து சம்மர் ஸ்பெஷல் வந்தே பாரத் ரயில்கள் – திருச்சி, மதுரை, நாகர்கோவில்!
- Finance பருவநிலை மாற்றத்தால் உலகமே வறுமையில் வாடப் போகிறது – எச்சரிக்கும் ஆய்வறிக்கை
- Sports "மும்பை சூப்பர் கிங்ஸ்"னு பேரை மாத்திக்கலாம்.. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மும்பை ஆக்கிரமிப்பு
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
அபிராமி ராமநாதன் - திருப்பூர் சுப்ரமணி பதவிப் போட்டியால் ரத்தான தியேட்டர் உரிமையாளர் கூட்டம்!
தமிழ்நாடு முழுவதும் உள்ள தியேட்டர்களில் படங்களை ஒரே மாதிரியாக விகிதாசார அடிப்படையில் திரையிட முடிவெடுக்க வரும் ஏப்ர்ல 20-ம் தேதி அன்று திருச்சியில் தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் கூட்டம் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டு வந்தது.
மாநிலத் தலைவர் பதவிக்கான போட்டி காரணமாக இந்த கூட்டம் தற்போது ரத்து செய்யப்பட்டு உள்ளதாகத் தெரிகிறது. ஆர் எம் அண்ணாமலை, அபிராமி ராமநாதன், திருப்பூர் சுப்பிரமணி ஆகியோர் ஆளுக்கொரு தியேட்டர் உரிமையாளர்கள் சங்கங்களை நடத்தி வருகின்றனர். திரையுலக பிரச்சினைகளை பொது வெளியில் உரக்கப் பேசி வருபவர் திருப்பூர் சுப்ரமணி மட்டுமே. இவரது பேச்சுக்கு மட்டுமே திரையுலகில் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. தமிழ்நாடு திரைப்பட விநியோகஸ்தர் கூட்டமைப்பில் தீர்மானிக்கும் சக்தியாக சுப்பிரமணி உள்ளார். கோவை திரைப்பட விநியோக பகுதியில் தியேட்டர்களை தனது பைனான்ஸ் பலத்தால் சுப்பிரமணி கட்டுபாட்டுக்குள் வைத்திருக்கிறார்.
சென்னை நகருக்குள் மட்டுமே அபிராமி ராமநாதனுக்கு பலம். ஆனால் இவர் சொல்வதை இங்கு யாரும் கேட்பதில்லை. செங்கல்பட்டு, சேலம் விநியோக பகுதிகளில் ஆர்எம் அண்ணாமலை கோஷ்டிக்கு பலம் அதிகம். மாநிலம் முழுவதும் உள்ள தியேட்டர்களை ஒருங்கிணைத்து இனிமேல் எம்.ஜி அடிப்படையில் படம் திரையிடுவதில்லை என்ற முக்கியமான முடிவை எடுத்து அறிவிக்க திருச்சியில் கூட்டம் நடத்த ஏற்பாடு நடந்து வந்தது.
தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் ஆர்எம் அண்ணாமலை தலைமையில், ரோகிணி பன்னீர்செல்வம் கட்டுப்பாட்டில் உள்ளது. இதுவே தமிழகஅரசு அங்கீகாரம் பெற்ற அமைப்பு. இதற்கு நீண்ட காலமாக தேர்தல் நடத்தப்படாமல் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகின்றது. இந்த அமைப்பின் தலைவராக திருப்பூர் சுப்பிரமணியம் கொண்டு வரப்பட வேண்டும் என ஒரு தரப்பு முயற்சித்து வருகின்றது. நீண்ட நாட்களாக தமிழ்நாடு தலைவராக ஆக வேண்டும் என்ற கனவில் இருந்து வரும் அபிராமி ராமநாதனும் இதற்கான முயற்சியில் உள்ளார்.
தியேட்டரை லீசுக்குக் கொடுத்து விட்டு தொழிலை விட்டு ஒதுங்கி ஓய்வு எடுத்துவரும் ஆர்எம் அண்ணாமலை பதவியை விட்டு தர விரும்பவில்லை. இவரை பொம்மை தலைவராக வைத்துக் கொண்டு தன் கட்டுப்பாட்டில் சங்கத்தை நடத்தி வருகிறார் ரோகிணி பன்னீர்செல்வம். சுயநலம் சார்ந்த இவர்களின் நடவடிக்கைகளால் தமிழ் சினிமாவை ஒழுங்குபடுத்தவும், திரையரங்கு உரிமையாளர்கள் இனியும் நஷ்டப்படாமல் இருக்கவும் முடிவு எடுப்பதற்காக கூட்டப்பட இருந்த கூட்டம் ரத்து செய்யப்பட்டு விட்டது. இதனால் பாதிக்கப்படப் போவது சாதாரண தியேட்டர் உரிமையாளர்களே!
- ராமன்
-
Baakiyalakshmi: வீட்டில் வாமிட் சத்தம் கேக்கனும்.. எழிலிடம் மல்லுகட்டிய ஈஸ்வரி.. இதுலதான் ட்விஸ்ட்!
-
மங்காத்தா என்ன பெரிய மங்காத்தா.. கோட் அதை விட பெரிய சம்பவம் செய்யப் போகுது.. அஜ்மல் ஓபன் டாக்!
-
98 கோடி சிக்கிடுச்சு.. ஷில்பா ஷெட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் சொத்துக்களை முடக்கிய அமலாக்கத்துறை!