Just In
- 10 min ago
ஆரியின் வெற்றி.. தர்மம் நின்று கொல்லும்.. கொன்றது.. குஷி மோடில் பிரபலம்.. தரமான செய்கை!
- 32 min ago
தனுஷ் படத்தில் நடிக்கும் சூர்யாவின் நண்பர்!
- 38 min ago
பத்து தல ஃபர்ஸ்ட் லுக் இன்று ரிலீஸ்.. கொண்டாட்டத்தில் சிம்பு ரசிகர்கள்
- 55 min ago
மகுடம் சூடிய ஆரி.. டிவிட்டரில் ட்ரென்ட்டாகும் ஹேஷ்டேக்.. கொண்டாடும் ரசிகர்கள்.. வேற லெவல்!
Don't Miss!
- Finance
உணவு டெலிவரி மீதான ஜிஎஸ்டி வரி 18% இருந்து 5% ஆக குறைக்க வேண்டும்.. நிதிமைச்சர் முடிவு என்ன..?!
- Automobiles
2021 எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் காருக்கான ஆக்ஸஸரீகள் குறித்த முழு விபரம்!! எது எதை பொருத்தினால் கார் நன்றாக இருக்கும்
- News
பீகார் எம்.எல்.சி தேர்தலில் மாஜி மத்திய அமைச்சர் ஷாநவாஸ் ஹூசைன்- வேட்பாளராக்கிய பாஜக வியூகம் என்ன?
- Sports
ரூ. 20+ கோடி.. பல முக்கிய வீரர்களை வெளியிடும் சிஎஸ்கே.. வெளியான அந்த லிஸ்ட்.. இன்னும் 2 நாள்தான்!
- Lifestyle
கா்ப்பப்பை வாய் புற்றுநோய் பற்றி ஒவ்வொரு பெண்ணும் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்!
- Education
ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
தயாரிப்பாளர் சங்கத் தேர்தல்.. தலைவரானார் 'தேனாண்டாள் பிலிம்ஸ்' முரளி.. டி.ராஜேந்தர் தோல்வி!
சென்னை: தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில், தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி தலைவராக வெற்றி பெற்றுள்ளார்.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு 2 வருடங்களுக்கு ஒருமுறை தேர்தல் நடைபெறுவது வழக்கம்.
கடந்த தேர்தலில் வெற்றி பெற்று விஷால் தலைவராக இருந்தார். அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் கூறப்பட்டதால் பிரச்சனை ஏற்பட்டது.

உயர்நீதிமன்றம்
பின்னர் வழக்குத் தொடுக்கப்பட்டது. இதற்கிடையே அரசு, சங்கத்தை நிர்வகிக்க தனி அதிகாரியை நியமித்தது. இந்நிலையில் நீதிமன்றம் தேர்தல் அதிகாரியாக, ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி எம்.ஜெய்சந்திரனை அறிவித்து, தேர்தல் நடத்த உத்தரவிட்டது. கொரோனா காரணமாக சில முறை தேர்தல் தேதி தள்ளி வைக்கப்பட்டது.

தேர்தல் தேதி
இந்நிலையில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தலை நடத்தி முடிக்க, டிசம்பர் மாதம் 31 ஆம் தேதி வரை அவகாசத்தை நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. இதையடுத்து தேர்தல் அதிகாரி எம்.ஜெய்சந்திரன் தேர்தல் தேதியை அறிவித்தார். அதன்படி சென்னை அடையாறில் உள்ள எம்.ஜி.ஆர்-ஜானகி கல்லூரியில் நேற்று (நவம்பர் 22) தேர்தல் நடைபெற்றது.

தேனாண்டாள் முரளி
இந்த தேர்தலில், தலைவர் பதவிக்கு டி.ராஜேந்தர், தேனாண்டாள் பிலிம்ஸ் என்.ராமசாமி என்கிற முரளி ராம.நாராயணன், பி.எல்.தேனப்பன் ஆகிய 3 பேர் போட்டியிட்டனர். துணைத் தலைவர்கள் பதவிக்கு கதிரேசன், மதியழகன், முருகன், பி.டி.செல்வகுமார், சிங்காரவடிவேலன், சிவசக்தி பாண்டியன், ஆர்.கே.சுரேஷ் ஆகியோர் போட்டியிட்டனர்.

கலைப்புலி ஜி.சேகரன்
செயலாளர்கள் பதவிக்கு கலைப்புலி ஜி.சேகரன், கோட்டபாடி ராஜேஷ், டி.மன்னன், ஆர்.ராதாகிருஷ்ணன், என்.சுபாஷ் சந்திரபோஸ் ஆகியோரும் பொருளாளர் பதவிக்கு சந்திரபிரகாஷ்.எஸ், கே.ராஜன், ஜே.சதீஷ்குமார் ஆகியோரும் போட்டியிட்டனர். வாக்குப் பதிவு நேற்று காலை 8 மணிக்கு தொடங்கியது. மொத்தமுள்ள 1,303 வாக்குகளில் 1050 வாக்குகள் பதிவாயின.

டி.ராஜேந்தர் தோல்வி
வாக்கு எண்ணிக்கை இன்று காலையில் தொடங்கியது. தொடக்கம் முதலே தலைவர் பதவிக்கு போட்டியிட்ட தேனாண்டாள் பிலிம்ஸ் என்.ராமசாமி முன்னிலையில் இருந்தார். பின்னர் அவர் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டார். அவர் 557 வாக்குகள் பெற்று வென்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட டி.ராஜேந்தர் 388 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார்.

ஆடுகளம் கதிரேசன்
பி.எல்.தேனப்பன் 87 வாக்குகள் பெற்றார். செல்லாத வாக்குகள் 17. துணைத் தலைவர்களாக 'ஆடுகளம்' கதிரேசனும் ஆர்.கே.சுரேஷும் வெற்றி பெற்றனர். செயலாளர்களாக ராதா கிருஷ்ணனும் மன்னனும் வெற்றி பெற்றுள்ளனர். பொருளாளராக சந்திரபிரகாஷ் ஜெயின் வெற்றி பெற்றுள்ளார்.