Don't Miss!
- News ஜாகுவார், லேண்ட் ரோவர் கார்களை.. உற்பத்தி செய்ய ராணிப்பேட்டையை தேர்வு செய்தது ஏன்? மொத்தமாக மாறுதே
- Finance ஓரே நாளில் 4.2 கோடி சம்பாதித்த நாராயணமூர்த்தி-யின் 5 மாத பேரன்.. எப்படி..?
- Technology இப்படியொரு புரொஜெக்டர் யாரும் பார்த்ததில்லை.. 32GB மெமரி.. 1080P ரெசல்யூஷன்.. எந்த மாடல்? என்ன விலை?
- Lifestyle தினமும் 10 பவுன் தங்கத்தை தூசியாக உமிழும் அதிசய எரிமலை... இந்த எரிமலையா இல்ல தங்கச்சுரங்கமானே தெரிலயே...!
- Automobiles ஹெல்மெட் போடாமல் பைக்கில் போன விஜய் சேதுபதி! ஓட்டு போட வந்த இடத்தில் மானமே போச்சு!
- Travel சென்னையிலிருந்து சம்மர் ஸ்பெஷல் வந்தே பாரத் ரயில்கள் – திருச்சி, மதுரை, நாகர்கோவில்!
- Sports "மும்பை சூப்பர் கிங்ஸ்"னு பேரை மாத்திக்கலாம்.. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மும்பை ஆக்கிரமிப்பு
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
நிறைய வேடிக்கைகள் காத்திருக்கிறது.. 23ம் தேதி கண்டிப்பாக தேர்தல் நடக்காது..ராதாரவி பேச்சால் பரபரப்பு
நடிகர் சங்கத் தேர்தல் நடைபெறாது என ராதாரவி தெரிவித்துள்ளார்.
சென்னை: நடிகர் சங்கத் தேர்தல் 23ம் தேதி நடைபெறாது என நடிகர் ராதாரவி கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு வரும் ஜூன் 23ஆம் தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது. விஷால் மற்றும் நாசரின் பாண்டவர் அணியும், கே.பாக்யராஜ் மற்றும் டாக்டர் ஐசரி கே கணேஷின் சுவாமி சங்கரதாஸ் அணியும் இத்தேர்தலில் போட்டியிடுகின்றன.
இந்நிலையில், கடந்த தேர்தலில் பாண்டவர் அணிக்கு எதிரணியாக போட்டியிட்டு தோல்வியைத் தழுவிய சரத்குமார் அணியில் இருந்தவரும், நடிகர் சங்க முன்னாள் பொதுச் செயலாளருமான ராதாரவி, இம்முறை தேர்தல் நடைபெறாது என கூறியிருக்கிறார்.
அழகுத் தீவு நயனுடன் கிரேக்க தீவில் விக்னேஷ் சிவன்: வாழ்வு தான் அன்பான இயக்குநரே
மாற்றமல்ல ஏமாற்றம்:
இது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியொன்றில், "கடந்த முறை எங்களுக்கு எதிராக போட்டியிட்ட விஷால் அணி மாற்றம் தேவை என்றார்கள். நான் மாற்றம் வரலாம் ஏமாற்றம் வரக்கூடாது என்றேன். இப்போது அது தான் நடந்திருக்கிறத்து. விஷால் மீது ஏமாற்றம் ஏற்பட்டிருக்கிறது எங்களுக்கு எதிராக அவருக்கு ஆதரவாக நின்ற அனைவரும் இப்போது அவருக்கு எதிராக நிற்கிறார்கள்.
ரஜினி:
கடந்த முறை ரஜினி தேர்தலில் ஓட்டு போட்டபோது யார் ஜெயித்தாலும் மூன்று ஆண்டுகளில் சொன்னதை நிறைவேற்ற வேண்டும் என்றார். இப்போது அவர்கள் ஒன்றையும் நிறைவேற்றாத ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது. அந்த அணி பொய்களை கூறி ஜெயித்த அணி.
விஷால்:
எதற்கெடுத்தாலும் விஷாலை முன்னிலைப்படுத்தி முன்னிலைப்படுத்தி இப்போது அசிங்கப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இது நடக்கும் என்று முன்பே கூறினேன். இன்னும் நிறைய வேடிக்கைகள் காத்திருக்கிறது.
தேர்தல் நடக்காது:
23 ம் தேதி கண்டிப்பாக தேர்தல் நடக்காது. அவர்கள் நடத்திய கலைநிகழ்ச்சிகளுக்கு முறையான கணக்கு தாக்கல் செய்யவில்லை. நிறைய குளறுபடிகள் நடந்திருக்கிறது. இந்த தேர்தல் காண்டிப்பாக நடக்காது" என இவ்வாறு ராதாரவி தெரிவித்துள்ளார்.