திமிரு இரண்டாம் பாகம்... தானே ஹீரோவாக நடிக்கிறார் தருண் கோபி
விஷால் நடித்து மாபெரும் வெற்றி பெற்ற படம் திமிரு. அந்தப் படத்தை இயக்கியவர் தருண்கோபி. அதற்கு பிறகு நடிகராக திசை மாறிய தருண்கோபி. மீண்டும் இயக்குனர் அவதாரம் எடுத்திருக்கிறார்.
திமிரு படத்தின் இரண்டாம் பாகத்துக்கு வெறி ( திமிரு 2 ) என்று தலைப்பிட்டவர், படத்தை எழுதி இயக்கி நாயகனாக நடிக்கிறார். சத்தமில்லாமல் படத்தை முடித்துவிட்டார் தருண் கோபி.

படத்தை டப்பிங்கின்போது பார்த்தவர்கள், காட்சிகளின் வேகம் கண்டு ஆச்சரியப்பட்டார்களாம். 'டைட்டிலுக்கு ஏற்ற மாதிரி படம் இருக்கிறது. சீக்கிரம் ரிலீஸ் பண்ணுங்க' என்றார்களாம்.
படத்தை எஸ்.எஸ்.புரொடக்ஷன்ஸ் சார்பில் சரவணன் தயாரித்துள்ளார். விரைவில் வெளியாகவிருக்கிறது படம்!
Comments


Click it and Unblock the Notifications