Don't Miss!
- News போலி பத்திரங்களை ரத்து செய்ய முடியுமா, முடியாதா? உயர்நீதிமன்ற உத்தரவால் ஏற்பட்ட மாற்றம் என்ன?
- Technology தல தோனியே சொல்லிட்டார்.. இது Smartwatch இல்லை குட்டி போன்னு.. பார்க்கதான் காஸ்ட்லீ.. ஆன ரேட் ரொம்ப கம்மி..
- Sports 8 வருஷமாக ஆர்சிபிக்கு தொடரும் சோகம்.. கேகேஆர் செய்த மாஸ் சம்பவம்.. வரலாற்றை மாற்றுவாரா விராட் கோலி?
- Automobiles வெறும் 1 மணி நேரத்தில் சென்னைல இருந்து பெங்களூர் போயிரலாம்! உலகையே மிரள வைக்கும் புல்லட் ரயில் சீறி பாய போகுது
- Lifestyle ஒரு டைம் காளானை வாங்கி இப்படி ட்ரை பண்ணுங்க.. சும்மா அள்ளும்...
- Finance மக்கள் அதிகம் வாங்குவதாலேயே தங்கம் விலை உயர்கிறதா..? உண்மை என்ன..?!
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
இளையராஜாவின் 1000வது படம் தாரைப் தப்பட்டை இசையை வெளியிடும் திங்க் மியூசிக்!
இளையராஜாவின் 1000வது படமான தாரை தப்பட்டையின் இசை வெளியீட்டு உரிமையைப் பெற்றுள்ளது சத்யம் நிறுவனத்தின் திங்க் மியூசிக்.
40 ஆண்டுகளுக்கு முன்பு தன் இசைப் பயணத்தை அன்னக்கிளியில் தொடங்கிய இளையராஜாவுக்கு தாரை தப்பட்டை 1000வது படமாகும். இந்தப் படத்துக்கு இசையமைத்து முடித்துவிட்டு, மேலும் ஒரு டஜன் படங்களுக்கு மேல் ஒப்பந்தமாகியுள்ளார்.
ஆனால் ஆயிரமாவது படம் என்ற பெருமை பாலாவின் தாரை தப்பட்டைக்கு மட்டுமே தந்துள்ளார். படத்தில் இசைக்கு முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது.
நாட்டுப்புறக் கலை
நாட்டுப்புறக் கலைஞர்களின் இசை வாழ்க்கையைப் பின்னணியாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள படம் இது. எம் சசிகுமார், வரலட்சுமி, சுரேஷ் களஞ்சியம் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
ஏழு பாடல்கள்
இந்தப் படத்தில் மொத்தம் ஏழு பாடல்கள் இடம் பெற்றுள்ளன. ஏழு பாடல்களும் நாட்டுப்புற இசை, கர்நாடக சங்கீதம், மேற்கத்திய இசை என வெவ்வேறு பாணியில் உருவாக்கப்பட்டுள்ளன.
திங்க் மியூசிக்
இந்தப் பாடல்களின் வெளியீட்டு உரிமையை சத்யம் நிறுவனத்துக்குச் சொந்தமான திங்க் மியூசிக் நிறுவனம் வெளியிடுகிறது. பாலா மற்றும் இளையராஜா படங்களின் இசையை இந்த நிறுவனம் வெளியிடுவது இது நான்காவது முறை.
இளையராஜாவுக்கு கவுரவம்
இசை வெளியீட்டு விழா வரும் டிசம்பர் 17-ம் தேதி சென்னையில் பிரமாண்டமாக நடக்கிறது. இந்த விழாவில் 1000 படங்களுக்கு இசையமைத்த இளையராஜாவை கவுரவிக்கவும் முடிவு செய்துள்ளனர்.