Don't Miss!
- News ‛‛குழந்தைகளை தண்டிக்க கூடாது’’.. NCPCR ரூல்ஸ்ஸை அமல்படுத்த பள்ளி கல்வித்துறைக்கு ஐகோர்ட் உத்தரவு
- Automobiles இன்னிக்கு அறிமுகமான இந்த கார் பத்தி நீங்க கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயம் இதுதான்!
- Lifestyle Kulfi: 4 பிரட்டும், 1 பால் பாக்கெட்டும் வெச்சு ஈஸியா குல்பி செய்யலாம் தெரியுமா? எப்படின்னு பாருங்க...
- Technology ஆளுக்கு 1 ஆர்டர்.. ரூ.12,498 போதும்.. 50MP செல்பி கேமரா.. OZO ஆடியோ.. அறிமுகமானது HMD போன்கள்.. எந்த மாடல்?
- Finance ஹார்லிக்ஸ் இனி ஹெல்த் ட்ரிங்க் இல்ல.. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு!
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
ரஜினியைச் சந்தித்தார் காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர்!
சென்னை: நடிகர் ரஜினிகாந்தை நேற்று திடீரென சந்தித்துப் பேசினார் காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர்.
ரஜினிகாந்த் அரசியலில் நேரடியாக இல்லை என்றாலும், கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக அவரைச் சுற்றி அரசியல் நடந்து வருகிறது.
தமிழக அரசியலில் உள்ள மிகப் பெரிய குழப்ப சூழலில், இப்போதாவது ரஜினி அரசியலுக்கு வருவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
ரஜினிகாந்தை தங்களது கட்சியின் பக்கம் இழுக்க தொடர்ந்து தேசிய கட்சிகள் முயன்று வருகின்றன. அவரோ எந்தக் கட்சியிலும் சேரமாட்டேன் என்பதில் உறுதியாக உள்ளார். குறிப்பாக ரஜினியை தமிழக பாஜகவுக்குள் இழுத்துவிட வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளனர்.
சில தினங்களுக்கு முன் ஆர்கே நகர் தேர்தல் பாஜக வேட்பாளரான கங்கை அமரன் மரியாதை நிமித்தமாக ரஜினியைச் சந்தித்துவிட்டு வந்தவர், ரஜினி விரைவில் அரசியல் முடிவு எடுப்பார் என்கிற ரீதியில் பேசிவிட்டுப் போக, உடனே ரஜினி தான் எந்தக் கட்சிக்கும் ஆதரவாக இல்லை என்று அறிவித்தார்.
இந்த சூழலில், நடிகர் ரஜினிகாந்தை தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் வெள்ளிக்கிழமை போயஸ் தோட்ட இல்லத்தில் சந்தித்துப் பேசினார். திருநாவுக்கரசர் தனது குடும்ப நிகழ்ச்சிக்கு நேரில் சென்று அழைப்பு விடுத்ததாக பின்னர் தகவல் வெளியானது.