Don't Miss!
- Technology ஒரு டிவிக்கு 2 டிவி ஆர்டர்.. 36 சதவீதம் டிஸ்கவுண்ட்.. ரூ.10,999-க்கு QLED டிவி.. டால்பி ஆடியோ.. எங்கு விற்பனை?
- News கார்த்தி சிதம்பரத்துக்கு குட்நியூஸ்.. பாஸ்போர்ட்டை 10 ஆண்டு புதுப்பித்து வழங்க ஹைகோர்ட் உத்தரவு
- Sports அரசியலில் குதிக்க போகும் சானியா மிர்சா.. மக்களுக்கு சேவை செய்ய திட்டம்.. எந்த கட்சி தெரியுமா?
- Lifestyle பழங்கால போட்டோக்களில் யாராவது சிரிச்சு நீங்க பாத்திருக்கீங்களா? பார்த்திருக்க வாய்ப்பேயில்லை... ஏன் தெரியுமா?
- Finance சென்செக்ஸ்: வருடத்தின் கடைசி நாள் ரூ.128.8 லட்சம் கோடி லாபம்.. பண மழையில் முதலீட்டாளர்கள்..!!
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Automobiles மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றார்?: 2 ஆண்டுகளுக்கு முன்பே சரியாக கணித்த ஜீனியஸ்
சென்னை: கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றார் என்ற கேள்விக்கு 2015ம் ஆண்டிலேயே ஒருவர் சரியான பதில் அளித்தது தற்போது தெரிய வந்துள்ளது.
ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ், அனுஷ்கா, ராணா, தமன்னா உள்ளிட்டோர் நடித்த பாகுபலி படம் 2015ம் ஆண்டு வெளியானது. படத்தை பார்த்தவர்கள் அனைவரும் கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றார் என்று கேட்டனர்.
அந்த கேள்விக்கு 2 ஆண்டுகள் கழித்து தற்போது பாகுபலி 2 படம் மூலம் பதில் கிடைத்துள்ளது.
கட்டப்பா
கோரா இணையதளத்தில் பெங்களூரை சேர்ந்த சுஷாந்த் தாஹால் என்பவர் கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றார் என்ற கேள்விக்கு 2015ம் ஆண்டு ஜூலை மாதம் 18ம் தேதி பதில் அளித்துள்ளார்.
வியப்பு
கோரா இணையதளத்தில் சுஷாந்த் அளித்துள்ள பதில் தான் அனைவரையும் வியக்க வைத்துள்ளது. காரணம் அவர் சரியாக கணித்துள்ளார். அவர் தனது பதிலில் கூறியிருப்பதாவது, அமரேந்திர பாகுபலி மற்றும் பல்லாள தேவன் ஆகியோர் தேவசேனா மீது காதல் கொள்கிறார்கள். ஆனால் தேவசேனா அமரேந்திர பாகுபலியை தேர்வு செய்கிறார்.
பல்லாள தேவன்
விரும்பிய பெண் மற்றும் ராஜ்ஜியத்தை இழந்த பல்லாள தேவன் கடுப்பாகி தனது தந்தையுடன் சேர்ந்து அமரேந்திர பாகுபலிக்கு எதிராக சதி செய்கிறார். ராணி சிவகாமியிடம் பேசுகிறார். அதன் பிறகு சிவகாமி கட்டப்பாவை அழைத்து அமரேந்திர பாகுபலியை கொல்ல உத்தரவிடுகிறார்.
கொலை
கட்டப்பாவுக்கு அமரேந்திர பாகுபலியை மிகவும் பிடிக்கும் என்றாலும் ராணியின் உத்தரவை தட்ட முடியாமல் பாகுபலியை கொலை செய்கிறார். இதை நினைத்து அவர் வாழ்நாள் முழுவதும் வருந்துகிறார்.
சிவகாமி
கட்டப்பா அமரேந்திர பாகுபலியை கொன்ற பிறகே பல்லாள தேவனின் உண்மையான நேக்கம் ராணி சிவகாமிக்கு தெரிய வருகிறது. பல்லாள தேவன் ராஜ்ஜியத்தை தன் வசப்படுத்த, குழந்தையை கொல்ல முயற்சிக்கிறார். இது தான் நான் கணித்த கதை என்று சுஷாந்த் தெரிவித்துள்ளார்.
ஆச்சரியம்
2 ஆண்டுகளுக்கு முன்பே கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றார் என்பதை சரியாக கணித்த சுஷாந்தை பலரும் பாராட்டுகிறார்கள். மேலும் அவரின் பதிலையும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார்கள்.