Don't Miss!
- News தென் சென்னையில் கள்ள ஓட்டு? பாஜக திமுக மாறி மாறி புகார்.. பெரும் பதற்றம்! என்ன நடக்கிறது
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
வெண்ணிலா பக்கத்தில் என்னை புதைச்சிடுங்க ப்ளீஸ்: நந்தினி கணவரின் கடைசி ஆசை
சென்னை: வெண்ணிலா பக்கத்தில் தன்னை புதைக்க வேண்டும் என்று நடிகை நந்தினியின் கணவர் கார்த்திக் கடிதம் எழுதி வைத்துள்ளார்.
தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வரும் நந்தினியின் கணவர் கார்த்திக் குளிர்பானத்தில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலை செய்யும் முன்பு அவர் எழுதிய கடிதம் கிடைத்துள்ளது.
கடிதங்கள்
கார்த்திக் இரண்டு கடிதங்கள் எழுதியுள்ளார். ஒரு கடிதத்தில் தான் தற்கொலை செய்ய நந்தினியின் தந்தை ராஜேந்திரனே காரணம் என தெளிவாக குறிப்பிட்டுள்ளார்.
அக்கா
கார்த்திக் தன் அக்கா ரம்யாவுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, ரம்யா அம்மாவ கூப்பிட்டு போய் வைச்சிக்கோ. நீ அம்மாவ பார்த்துக்கோ என தெரிவித்துள்ளார்.
முடியல
என்னால இதுக்கு மேலே வாழ முடியவில்லை. எனக்கு வாழவும் தெம்பு இல்லை. இத்தனை நாள் பிணமாக தான் வாழ்ந்தேன்.இனிமேல் நான் இருப்பது சரியில்லை. என்னால் வாழ முடியவில்லை. இனிமேல் நான் இருப்பது வேஸ்ட். என் கௌரவம், மரியாதை போச்சு. அம்மாவ பார்த்துக்கோ என கார்த்திக் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
கடைசி ஆசை
என் இறுதி ஆசை. வெண்ணிலாவை புதைத்த இடத்தில் பக்கத்தில் என்னையும் புதைக்க வேண்டும். வெண்ணிலா பக்கத்தில் என்னை புதையுங்கள் ப்ளீஸ் என கார்த்திக் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.