Don't Miss!
- Travel சென்னையிலிருந்து சம்மர் ஸ்பெஷல் வந்தே பாரத் ரயில்கள் – திருச்சி, மதுரை, நாகர்கோவில்!
- News ஈரான் நினைத்தால்.. சில நாட்களில் அணு ஆயுதங்களை தயாரிக்கலாம்.. அஞ்சும் அமெரிக்கா.. என்ன நடக்குது?
- Technology மிரட்டும் 3 கண் கேமரா.. இதில் 1" இன்ச் ரிட்ராக்டபிள் கேமராவும் இருக்கு.. தூள் பறக்குது HUAWEI Pura 70 Ultra..
- Lifestyle இந்த அறிகுறிகள் காலை வேளையில் தெரியுதா? அப்ப கல்லீரல் ஆபத்தில் இருக்கு-ன்னு அர்த்தம்.. உஷார்..
- Finance பருவநிலை மாற்றத்தால் உலகமே வறுமையில் வாடப் போகிறது – எச்சரிக்கும் ஆய்வறிக்கை
- Automobiles நடிகர் தனுஷ் ஓட்டு போட வந்த காரின் விலை என்ன தெரியுமா? இவ்வளவு காஸ்ட்லியான காரா இது?
- Sports "மும்பை சூப்பர் கிங்ஸ்"னு பேரை மாத்திக்கலாம்.. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மும்பை ஆக்கிரமிப்பு
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
பிக்பாஸ் சீசன் 5...பனிரெண்டாவது வாரத்தில் நாமினேட் ஆன 6 பேர்
சென்னை : பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி நேற்றோடு 78 நாட்களை கடந்து விட்டது. நிகழ்ச்சி நிறைவடைய இன்னும் நான்கு வாரங்கள் மட்டுமே உள்ளது. ஆனால் 10 போட்டியாளர்கள் வீட்டிற்குள் உள்ளனர்.
ஹேப்பி பர்த் டே பேபிஸ்...இவங்க தான் இன்று பிறந்தநாள் கொண்டாடும் ப்யூட்டிஸ்
இதனால் டபுள் எவிக்ஷன் இருக்கும் என ஒவ்வொரு வாரமும் கூறப்பட்டு வருகிறது. ஆனால் இதுவரை அப்படி நடக்கவில்லை. ஒவ்வொரு வாரமும் ஒருவர் என்ற எண்ணிக்கையிலேயே போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.
கேப்டனான தாமரை
இந்நிலையில் நேற்றைய எபிசோடில் இந்த வாரத்திற்கான கேப்டனை தேர்வு செய்யும் டாஸ்க் நடைபெற்றது. இதில் போட்டியாளர்கள் அனைவரும் கயிறை விடாமல் பிடித்தபடி இருக்க வேண்டும். இறுதி வரை கயிற்றை விடாமல் இருப்பவரே இந்த வார கேப்டன் என கூறப்பட்டது. இதில் வழக்கம் போல் பல மோதல் நடந்தது. அவற்றை கடந்து தாமரை இந்த வார கேப்டன் ஆனார்.
நாமினேஷன் ப்ராசஸ்
பிறகு பனிரெண்டாவது வாரத்திற்கான நாமினேஷன் ப்ராசஸ் நேற்று நடைபெற்றது. இதில் ஒவ்வொரு போட்டியாளரும் மூன்று பேரை நாமினேட் செய்ய வேண்டும் என பிக்பாஸ் கூறினார். கேப்டனான தாமரையை நாமினேட் செய்ய முடியாது என தெரிவிக்கப்பட்டது.
நாமினேட்டான 6 பேர்
இதில் அதிகமானவர்கள் பிரியங்கா, நிரூப், பாவனி ஆகியோரை நாமினேட் செய்தனர். தற்போது வீட்டிற்குள் உள்ள 10 போட்டியாளர்களில் இந்த வாரம் 6 பேர் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர். சிபி, பாவனி, அக்ஷரா, பிரியங்கா, நிரூப், வருண் ஆகியோர் இந்த வார நாமினேஷில் இருக்கிறார்கள்.
Recommended Video
இவர் தான் வெளியேற போகிறாரா
இவர்களில் நிரூப், வருண், அக்ஷரா, பாவனி ஆகியோரில் யாராவது ஒருவர் வெளியேற்றப்படலாம் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்துள்ளனர். நிரூப்பை வெளியேற்றினால் நன்றாக இருக்கும் என பலர் கமெண்ட் செய்துள்ளனர். வீட்டில் உள்ளவர்களுக்கும், பார்ப்பவர்களுக்கும் நிரூப் மீது அதிருப்தி ஏற்பட்டுள்ளதால் அவர் வெளியேற்றப்படவே அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.