துடி... காலை 6 முதல் மாலை 6 மணிக்குள் நடக்கும் விறுவிறு சம்பவங்கள்!
மைன்டிராமா என்ற பட நிறுவனம் சார்பாக ரிதுன் சாகர், ஜி.லஷ்மி இருவரும் இணைந்து தயாரிக்கும் படம் துடி.
இந்த படத்தில் அபிநயா நாயகியாக நடிக்கிறார். சுமன், பிரமானந்தம், சூது கவ்வும் ரமேஷ், நளினி நடிக்கின்றனர். படத்தின் இன்னொரு நாயகியாக பிரேர்னா நடிக்கிறார். இவர்களுடன் முக்கிய வேடம் ஒன்றில் முன்னணி நடிகர் ஒருவரும் நடிக்கிறார்.

கமலா தியேட்டரின் அதிபர் சிதம்பரத்தின் மகன் கணேஷ் அமைச்சர் வேடத்தில் நடிக்கிறார்.
நடாஷா ஆதித்யா இசையமைக்கிறார். ரிதுன் சாகர் எழுதி இயக்குகிறார். இவர் யாரிடமும் உதவியாளராக பணியாற்றவில்லை. விஷுவல் படித்து விட்டு நிறைய குறும்படங்கள் இயக்கி, அந்த அனுபவத்தைக் கொண்டு இந்த துடியை உருவாக்கியுள்ளார்.

படம் பற்றி இயக்குனரிடம் கேட்டோம்...
ஒரு பைவ் ஸ்டார் ஹோட்டலில் நடக்கும் டெரரிஸ்ட் அட்டாக் தான் கதை. மாலை 6 மணிக்கு துவங்கி காலை 6 மணிக்குள் நடக்கும் சம்பவங்களைத் திரைக்கதையாக்கியிருக்கிறோம். இந்த 12 மணி நேரத்தில் ஏற்படும் மிஸ் கம்யூனிகேசன்தான் கதையின் மையக் கரு.

ஹோட்டல் ரிசப்சனிஸ்ட் ஆக அபிநயா நடிக்கிறார். படம் ஆரம்பித்தவுடன் முடியும் வரை ரசிகர்களை சீட் நுனியில் அமர் வைக்கும் மன நிலையில் இருக்க வைக்கும் இந்தக் கதை. இதற்காக சென்னையில் பைவ் ஸ்டார் ஹோட்டலில் இண்டீரியர் அரங்குகள் அமைக்கப்பட உள்ளது.
சென்னை, ஹைதராபாத், மூணார் போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடத்தவிருக்கிறோம்," என்றார் ரிதுன் சாகர்.


Click it and Unblock the Notifications











