துளி... விவசாயிகளின் வேதனையை இந்த குறும்படத்தை விட உருக்கமாகச் சொல்ல முடியாது!
திறமைகளை அடையாளம் காட்டுவதில் எப்போதுமே ஒன் இந்தியா இணையதளம் முன் நிற்கும். அந்த வகையில் மூன்றே நிமிடங்களில் தமிழ் நாட்டு விவசாயிகளின் ஒட்டுமொத்த அவலத்தையும் அழகாக படம் பிடித்துக் காட்டியிருக்கிறது துளி குறும்படம்.

நடிகர் சூர்யா நடத்தும் குறும்பட போட்டிக்காக எடுக்கப்பட்டிருக்கும் இந்த குறும்படம் தமிழ்நாட்டுக்கு தேவையான முக்கிய கருத்தை எடுத்து சொன்ன விதத்தில் தமிழ் ஒன் இந்தியா இணையதளத்தை கவர்ந்து விட்டது. இந்த படம் முழுக்க முழுக்க ஐபோனிலேயே எடுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
மும்பையில் பணிபுரிந்த தமிழ்நாட்டை சேர்ந்த கார்த்திக் குமார் என்ற ஒளிப்பதிவாளரின் எண்ணத்திலும் வண்ணத்திலும் உருவான 'துளி' குறும்படத்தை காண கீழே உள்ள இணைப்பை சொடுக்கவும். இந்த குறும்படத்துக்கு இசையமைத்திருப்பது சினிமா இசையமைப்பாளர் இஷான் தேவ்.
Comments


Click it and Unblock the Notifications