Don't Miss!
- News பிறந்தது சென்னை தான்.. ஆனா கன்னடா தெரியுமா? பிரசாரத்தில் தமிழர்களிடம் சிவராஜ் குமார் திடீர் கேள்வி
- Lifestyle சப்பாத்திக்கு ஏற்ற மணமணக்கும்... ருசியான.. சைவ சிக்கன் கிரேவியை எப்படி செய்யணும் தெரியுமா?
- Sports IPL Classics - 2010 சீசன் அரையிறுதியில் CSK வென்றது எப்படி? பலம் வாய்ந்த டெக்கான் அணியுடம் மோதிய கதை
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
- Automobiles அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
காலம் இளையராஜாவையும் என்னையும் சேர்த்து வைக்கும்! - எஸ்பிபி
காலம் இளையராஜாவையும் என்னையும் சேர்த்து வைக்கும் என்று பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் கூறியுள்ளார்.
தனது பாடல்களை மேடைகளில் பாடுவதற்கு முன் முறைப்படி அனுமதி பெற வேண்டும் என இளையராஜா சார்பில் எஸ்பிபி உள்ளிட்ட பாடகர்களுக்கு சில நாட்களுக்கு முன் கடிதம் அனுப்பப்பட்டது.
நியாயம் யார் பக்கம்?
வழக்கமாக அனுப்பப்படும் ஒரு சட்ட ரீதியான கடிதத்தை, எஸ்பிபி பொது வெளியில் கொண்டு, பெரிய பிரச்சினையாக மாற்றினார். தன்னுடைய ஈகோவை விட்டுத் தர முடியாமல் அவர் ரசிகர்களுக்கிடையே மோதலாக மாற்றியதை ஓரிரு நாட்களுக்குப் பிறகு ரசிகர்கள் புரிந்து கொண்டார்கள். எஸ்பிபி தனக்கு காப்பி ரைட் சட்டங்கள் தெரியாது எனக் கூறினார். ஆனால் இதே எஸ்பிபிதான் தங்களுக்கான காப்பிரைட் தொகைக்காக உண்ணாவிரதம் இருந்தார் என்பதை மீடியா வெளிச்சத்துக்குக் கொண்டுவந்தது.
இளையராஜாவுக்கு ஆதரவு
இந்த விவகாரத்தில் இளையராஜா பக்கம் நூறு சதவீத நியாயம் இருப்பதை திரையுலகினர் புரிந்து, அவரை நேரில் சந்தித்து தங்கள் ஆதரவைத் தெரிவித்துள்ளனர்.
எஸ்பிபியிடம் கேள்வி
இந்த நிலையில்தான் மீண்டும் இளையராஜாவுடன் இணைந்து பணியாற்றுவீர்களா என சமீபத்தில் அமெரிக்காவில் கச்சேரி நடத்தி வரும் எஸ்பிபியிடம் கேட்டுள்ளனர்.
நாங்கள் நண்பர்கள்
இதற்கு பதிலளித்த அவர், "இளையராஜாவும், நானும் சினிமாவிற்குள் நுழைவதற்கு முன்பே நண்பர்கள். இப்போது இளையராஜாவின் பாடல்களை பாட முடியாததால் மனதளவில் வருத்தப்பட்டேன்.
காப்பிரைட் பத்தி தெரியாது
எனக்கு இந்த காப்புரிமை பிரச்சனை குறித்த எதுவுமே தெரியாது. அவர் அனுப்பிய நோட்டீஸ் மூலமே இவ்வாறு சட்டம் உள்ளதை அறிந்தேன். இதுபோன்று சட்டம் இருப்பது முன்பே தெரிந்திருந்தால், இளையராஜாவிடம்தான் அனுமதி கேட்டிருப்பேன். இளையராஜா இதுபோன்று காப்புரிமை பெற்றுள்ளார் என்று எனக்குத் தெரியாது.
காலம் தீர்த்து வைக்கும்
எங்களுக்குள் எந்தவித கருத்து வேறுபாடும் கிடையாது. எனக்கென்று ஒரு சுயமரியாதை இருக்கிறது. அதுவே தற்போது, இளையராஜாவுடன் பேசவிடாமல் தடுக்கிறது. இந்தப் பிரச்சினையை காலம் தீர்த்து வைக்கும் என நம்புகிறேன்," என்றார்.