Don't Miss!
- News உங்க ஐகியூவை டெஸ்ட் பண்ணிடலாம்.. எந்த டேங்கர் லாரி போய்க்கொண்டு இருக்கிறது.. முடிந்தால் கண்டுபிடிங்க
- Finance ரிலையன்ஸ் ஜியோ மூத்த அதிகாரி திடீர் ராஜினாமா..!!
- Sports ஜடேஜா பேட்டிங் முதல் ருதுராஜ் கேப்டன்சி வரை.. சிஎஸ்கே செய்த தவறுகள்.. தோல்விக்கு காரணமான 3 சம்பவம்!
- Automobiles ஓலா, ஏத்தர் எல்லாம் ஓரமா போ! ஆம்பியர் நிறுவனத்தின் புதிய இவி 30ம் தேதி வருது!
- Lifestyle குரு பார்வை இருந்தால் திருமணம் நடந்துவிடுமா? ஜோதிடம் சொல்வது என்ன?
- Technology கம்பெனிக்கு கட்டுமா பாஸ்.. ரூ.10,999 போதும்.. 108MP கேமரா.. 8GB ரேம்.. புதிய itel போன் அறிமுகம்.. எந்த மாடல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
லிங்கா பிரச்சினை தீர்ந்தது: ராக்லைன் வெங்கடேஷுக்கு உதவிய திருப்பூர் சுப்பிரமணியன்!
லிங்கா தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் தரவேண்டிய தொகையில் ஒரு பகுதியை திருப்பூர் சுப்பிரமணியன் ஏற்றதால் லிங்கா பிரச்சினை முடிவுக்கு வந்துள்ளது.
லிங்கா படத்துக்கு நஷ்ட ஈடாக ரூ 12.5 கோடியை ரஜினியும் ராக்லைன் வெங்கடேஷும் தர சில மாதங்களுக்கு முன் சம்மதித்திருந்தனர்.
அதில் ரஜினிகாந்த் மட்டும் தனது பங்காக ரூ 6.50 கோடியை தயாரிப்பாளர் சங்கத் தலைவர் தாணு மற்றும் விநியோகஸ்தர் திருப்பூர் சுப்பிரமணியத்திடம் கொடுத்து உரிய முறையில் பிரித்துக் கொடுக்கச் சொன்னார்.
அடுத்து ராக்லைன் வெங்கடேஷ் தனது பங்காக ரூ 6 கோடியை பின்னர் தருவதாகக் கூறியிருந்தார். ஆனால் தனிப்பட்ட சில காரணங்களால் அவர் பணம் தர தாமதமானது.
இந்த நிலையில் லிங்கா பிரச்சினைக்கு தீர்வு காணும் கூட்டம் சமீபத்தில் கூடியது. இதில் ராக்லைன் வெங்கடேஷ், தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கலைப்புலி தாணு, துணைத் தலைவர் கதிரேசன், செயலாளர்கள் டி சிவா, ராதாகிருஷ்ணன், வேந்தர் மூவீஸ் எஸ் மதன், விநியோகஸ்தர் திருப்பூர் சுப்பிரமணியன், பிலிம்சேம்பர் நிர்வாகி காட்ரகட்ட பிரசாத், விநியோகஸ்தர் சங்கத்தைச் சேர்ந்த அருள்பதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் ரூ 4.75 கோடியைக் கொடுத்தார். மீதிப் பணத்தை தன்னால் தர முடியாத நிலையில் இருப்பதாகக் கூறினார்.
இதைத் தொடர்ந்து மீதிப் பணமான ரூ 1.25 கோடியை தானே தர முன்வந்தார் விநியோகஸ்தர் திருப்பூர் சுப்பிரமணியன்.
"ரஜினியை வைத்து பல கோடியைச் சம்பாதித்தவன் நான். இன்று அவருக்கு ஒரு பிரச்சினை வந்து முடியாமல் இழுத்துக் கொண்டிருப்பதைப் பார்க்க விரும்பவில்லை. ரஜினி சாருக்காக அந்த 1.25 கோடி ரூபாயை நானே தருகிறேன்," என்று அவர் அறிவித்தபோது, அரங்கிலிருந்த மொத்தப் பேரும் கைத் தட்டினர். திருப்பூர் சுப்பிரமணியத்தின் இந்த அறிவிப்பு ராக்லைன் வெங்கடேஷை நெகிழ வைத்தது.
இத்தனைக்கும் லிங்கா படத்தின் விநியோக உரிமையை திருப்பூர் சுப்பிரமணியம் வாங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
முடிச்சிடலாமா.. கூலி டைட்டில் டீசரில் ரஜினியின் டயலாக்.. முந்தைய படங்களை போலவே மாஸ் காட்டும் லோகேஷ்!
-
எப்பாதை போனாலும் இன்பத்தை தள்ளாதே.. ரஜினியின் 171 ஆவது பட டைட்டில் கூலி.. ரசிகர்கள் செம வரவேற்பு
-
என்னை அரசியலுக்கு வரவிடாதீங்க.. நீங்க நல்லது செய்யுங்க.. நான் நடிச்சுட்டு போய்டுவேன்.. விஷால் பேட்டி!