Don't Miss!
- Automobiles இவ்ளோ அழகா பிக்-அப் டிரக்கா! குடும்பத்தோட மட்டுமல்ல வீட்டையே காலி பண்ணிட்டு போகலாம்.. நிறைய வழிகளில் யூஸ் பண்ண
- News அமெரிக்காவின் வீழ்ச்சி ஆரம்பம்.. டாலருக்கு கூட்டாக ஆப்பு வைத்த சீனா - ரஷ்யா.. உலக அரசியலே ஆடுதே!
- Technology WhatsApp-க்கு இன்டர்நெட் வேண்டாம்.. ஆஃப்லைனில் போட்டோ, வீடியோ ஷேரிங்.. புதிய பீச்சர் வருது.. பர்மிஷன் போதும்!
- Lifestyle உங்கள் கால் நகங்களை அழகாக மாற்ற அற்புதமான டிப்ஸ்..
- Finance இனி பீட்சா முதல் பெப்சி வரை இவர்கள் கையில் தான்..!! வாரிசு கைக்கு மாறும் ஆர் ஜே கார்ப்பரேஷன்..!
- Sports சிஎஸ்கே அணிக்கு சிக்கல்.. பிளே-ஆஃப் வாய்ப்புக்கு ஆப்பு வைத்த 2 அணிகள்.. இனி என்ன செய்ய வேண்டும்?
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
ஓட்டுப் போடாதவர்களின் ஆத்மா சாந்தி அடையட்டும்... ஆர்ஜே பாலாஜி காட்டம்!
சென்னை: தமிழகத்தில் நேற்று நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் குறைந்த வாக்குகள் மட்டுமே சென்னையில் பதிவானது. இது குறித்து நடிகர் ஆர்.ஜே.பாலாஜி கடும் ஏமாற்றமும்,ஓட்டுப் போடாதவர்களுக்குக் கண்டனமும் தெரிவித்திருக்கிறார்.
தலைமைத் தேர்தல் ஆணையம் தமிழ்நாட்டில் 100% வாக்குப்பதிவை எட்ட வேண்டும் என்பதற்காக, கடுமையான முயற்சிகளை கடந்த சில மாதங்களாக செய்து வந்தது.
இதற்காக ஏராளமான விளம்பரங்களையும் வெளியிட்டு மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்திட முயன்றது. இந்நிலையில் மற்ற மாவட்டங்களை விட குறைந்த சதவீத வாக்குகளே சென்னையில் பதிவாகியுள்ளது.
இதனால் மொத்தமுள்ள 32 மாவட்டங்களில் மிகக்குறைந்த வாக்குப்பதிவு பெற்ற மாவட்டம் என்ற பெருமை தற்போது சென்னைக்கு கிடைத்துள்ளது.
இதுகுறித்து சமூக வலைதளங்களில் மிகப்பெரிய அளவில் விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் நடிகர் ஆர் ஜே பாலாஜி ''சென்னையில் 57 சதவீதம் தானா?அட போங்கடா டேய்.
தமிழ்நாட்டில் 100 சதவீத வாக்குப்பதிவுக்காக செய்யப்பட்ட விழிப்புணர்வு பிரச்சாரம், உழைப்பு எல்லாம் வீண். மீதமுள்ள 43 சதவீத மக்களின் ஆன்மா சாந்தி அடையட்டும் " என கோபத்துடன் கூறியிருக்கிறார்.
சென்னையில் வாக்குப்பதிவு குறைந்தது குறித்து விசாரணை நடத்தப்படும், என தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
-
13 வருடங்களாக காதலித்துவரும் கீர்த்தி சுரேஷ்?.. இதுக்கு இல்லையா சார் ஒரு எண்டு.. ரசிகர்கள் கேள்வி
-
வேலுவுடன் கூட்டணி சேர்ந்த மனோகரி.. சிக்கலில் சிக்கும் சுடர்..நினைத்தேன் வந்தாய் இன்றைய எபிசோட்!
-
அங்க கை வெச்சு.. ஷூட்டிங் ஸ்பாட்ல இயக்குநர் தப்பா நடந்துக்குட்டார்.. நயன்தாரா பட நடிகை பகீர்