Don't Miss!
- News வின்னர் யாரு? ரிப்போர்ட் அனுப்புங்க.. வாக்குச்சாவடி ரீதியாக திமுக, அதிமுக திக் சர்வே! எகிறிய பதற்றம்
- Lifestyle திருப்பதிக்கு செல்லும் பக்தர்களுக்கு ஹப்பி நியூஸ்.. ஐஆர்சிடிசி அறிவித்த டூர் பேக்கேஜ்.. இதோ முழு விவரம்..!
- Sports தமிழக வீரரால் நடந்த மாற்றம்.. குஜராத் அணிக்கு ஆப்பு வைத்த சுப்மன் கில்.. ஆட்டத்தை மாற்றிய ஒரு முடிவு
- Finance ஆதார் அட்டை தொலைஞ்சி போயிடுச்சா.. கவலை வேண்டாம்.. இதை மட்டும் பாலோ பண்ணுங்க..!
- Technology மினிமம் பேலன்ஸ் விதிகள்.. மே.1 முதல் அமல்.. உங்க அக்கவுண்ட்டில் ரூ.5000 வேண்டும்.. எந்த வங்கிக்கு எவ்வளவு?
- Automobiles அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
பெங்களூரில் விஸ்வரூபம் ரத்து: தமிழகத்தில் இருந்து சென்ற ரசிகர்கள் ஏமாற்றம்
தமிழகத்தில் விஸ்வரூபம் படத்தை திரையிட தமிழக அரசு தடை விதித்துள்ளது. இதையடுத்து அண்டை மாநிலமான கேரளாவில் விஸ்வரூபம் ரிலீஸானது. இதையடுத்து படத்தைப் பார்க்க தமிழக-கேரள எல்லையில் உள்ள ஊர்களில் வசிக்கும் ரசிகர்கள் கேரளா சென்றனர். இதே போன்று ஒசூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருச்சி, மதுரை உள்ளிட்ட பல பகுதிகளில் வசிக்கும் ரசிகர்கள் படம் பார்க்க பெங்களூர் சென்றனர்.
ஆனால் நேற்று கர்நாடக மாநிலம் ஷிமோகா மாவட்டத்தில் உள்ள பத்ரவாதியில் விஸ்வரூபம் திரையிடப்பட்டபோது அதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரு கும்பல் தியேட்டருக்குள் புகுந்து கைகலப்பாகிவிட்டது. இதையடுத்து போலீசார் தடியடி நடத்தி அவர்களை கலைத்தனர். இந்நிலையில் பெங்களூரில் விஸ்வரூம் திரையிடப்படவிருந்த ஊர்வசி தியேட்டரில் படம் ரத்து செய்யப்பட்டது.
இதனால் படம் பார்க்க தமிழகத்தில் இருந்து பெங்களூர் சென்ற ரசிகர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.