twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பெங்களூரில் விஸ்வரூபம் ரத்து: தமிழகத்தில் இருந்து சென்ற ரசிகர்கள் ஏமாற்றம்

    By Siva
    |

    Bangalore
    பெங்களூர்: விஸ்வரூபம் படத்தைப் பார்க்க தமிழகத்தில் இருந்து பெங்களூர் சென்ற ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

    தமிழகத்தில் விஸ்வரூபம் படத்தை திரையிட தமிழக அரசு தடை விதித்துள்ளது. இதையடுத்து அண்டை மாநிலமான கேரளாவில் விஸ்வரூபம் ரிலீஸானது. இதையடுத்து படத்தைப் பார்க்க தமிழக-கேரள எல்லையில் உள்ள ஊர்களில் வசிக்கும் ரசிகர்கள் கேரளா சென்றனர். இதே போன்று ஒசூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருச்சி, மதுரை உள்ளிட்ட பல பகுதிகளில் வசிக்கும் ரசிகர்கள் படம் பார்க்க பெங்களூர் சென்றனர்.

    ஆனால் நேற்று கர்நாடக மாநிலம் ஷிமோகா மாவட்டத்தில் உள்ள பத்ரவாதியில் விஸ்வரூபம் திரையிடப்பட்டபோது அதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரு கும்பல் தியேட்டருக்குள் புகுந்து கைகலப்பாகிவிட்டது. இதையடுத்து போலீசார் தடியடி நடத்தி அவர்களை கலைத்தனர். இந்நிலையில் பெங்களூரில் விஸ்வரூம் திரையிடப்படவிருந்த ஊர்வசி தியேட்டரில் படம் ரத்து செய்யப்பட்டது.

    இதனால் படம் பார்க்க தமிழகத்தில் இருந்து பெங்களூர் சென்ற ரசிகர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

    English summary
    Kamal fans from Tamil Nadu went to Bangalore on saturday to watch Vishwaroopam. But they returned without watching it after the show was cancelled.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X