Don't Miss!
- News 88 தொகுதிகள்.. இன்று 13 மாநிலத்தில் 2ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா, கர்நாடகாவிலும் ஓட்டுப்பதிவு
- Technology இனி Signal Weak சிக்கலே இருக்காது.. மொபைல் Settings-ல இதை பண்ணா போதும்.. இன்டர்நெட் ஸ்பீட் சும்மா பிச்சிக்கும்
- Finance வேலைக்கு சேர்ந்த 6 மாசத்திலேயே ரிசைன்.. அனல் பறக்கும் விவாதம்..!
- Automobiles சாதா கிளாஸ் டிக்கெட்டை வாங்கிட்டு முதல் வகுப்பில் பயணிக்கனுமா!! விமான பணி பெண் சொல்லும் மூன்று ரகசிய வழிகள்!
- Lifestyle Today Rasi Palan 26 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் வேலை மாற்றத்தைப் பற்றி யோசிக்காமல் இருப்பது நல்லது..
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
விஸ்வரூபம் தடை நீக்கத்தை எதிர்த்து தமிழக அரசு இன்று மேல் முறையீடு
கமல்ஹாசன் நடிப்பில் உருவான விஸ்வரூபம் திரைப்படத்திற்கு, தமிழக அரசு விதித்த இரு வார கால தடை மற்றும் அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் விதித்திருந்த 144 தடை உத்தரவை நீக்கினார் நீதிபதி வெங்கட்ராமன்.
இதனையடுத்து, விஸ்வரூபம் திரைப்படம் திரையிடப்படுவதற்கு எதிரான சிக்கல் தற்காலிகமாக முடிவுக்கு வந்துள்ளது. எனினும் இந்த வழக்கில் மேல்முறையீடு செய்ய தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக அரசு தலைமை வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
நீதிபதியின் உத்தரவை அடுத்து, இந்த உத்தரவு அமுலுக்கு வருவதை புதன் கிழமை காலை 10.30 மணி வரை ஒத்திவைக்க வேண்டும் என்ற கோரிக்கை தமிழக அரசு சார்பில் விடுக்கப்பட்டது. ஆனால் நீதிபதி இதனை ஏற்க மறுத்துவிட்டார்.
இதனையடுத்து, சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி எலிபி தர்மாராவை அவரது இல்லத்தில், இரவு 11. 30 மணி அளவில் சந்தித்த அரசு வழக்கறிஞர்கள் குழு, மேல் முறையீடு செய்வதற்கான அனுமதியை பெற்றது. இதனையடுத்து இந்த மேல் முறையீட்டு மனு இன்று மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது.
இந்த வழக்கில் உடனடியாக தீர்ப்பு வழங்கப்பட்டால் விஸ்வரூபம் இன்று வெளியாவதும் கஷ்டமே.