Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
இன்று பாகுபலி பிரமாண்ட ரிலீஸ்.. முதல் காட்சிக்கு அலைமோதிய கூட்டம்... ஒரு வாரத்துக்கு டிக்கெட் லேது!
ஒரு வழியாக இன்று அதிகாலையிலேயே பாகுபலி படம் வெளியாகிவிட்டது. இதுவரை இல்லாத பெரும் வரவேற்புக்கிடையில் இந்தப் படம் வெளியாகியிருக்கிறது.
மக்கள் அதிகாலையிலிருந்தே பெரும் வரிசையில் காத்திருந்து படம் பார்க்கச் சென்றனர். நான் சொல்லும் காட்சிகளெல்லாம் ஆந்திராவிலோ தெலங்கானாவிலோ நடந்ததல்ல.. இங்கே தலைநகர் சென்னையில் நடந்தது!
தமிழ்ப் பதிப்பு 550 அரங்கிலும், தெலுங்குப் பதிப்பு 50 அரங்குகளிலும் தமிழகத்தில் வெளியாகியுள்ளன.
ஒரு வாரம் டிக்கெட் இல்லை
சத்யம் குழும அரங்குகளில் அடுத்த வாரம் வரைக்கும் டிக்கெட் இல்லை என்பதை நிலைமை. அடுத்த வாரம் கூட முன் வரிசை டிக்கெட்டுகள் மட்டும்தான் இப்போதைக்கு கிடைக்கின்றன.
மாயாஜாலில் 68 காட்சிகள்
மாயாஜாலில் நாளொன்றுக்கு 68 காட்சிகள் பாகுபலி திரையிடப்படுகிறது. சுவாரஸ்யம் என்னவென்றால் இந்த 68 காட்சிகளில் 46 காட்சிகள் தெலுங்குப் பதிப்புக்கு. மீதி 18 காட்சிகள்தான் தமிழுக்கு!
5 மணிக்கு முதல் காட்சி
அதிகாலை 5 மணிக்கெல்லாம் படத்தின் சிறப்புக் காட்சி திரையிடப்பட்டது. முதல் காட்சிக்கு கூட்டம் அலைமோதியது. ரஜினி படங்களுக்கு மட்டுமே இப்படி ஒரு கூட்டம் வரவேற்பைப் பார்க்க முடியும் தமிழகத்தில்.
உலகெங்கும்
தமிழகம், ஆந்திரா, தெலங்கானா மட்டுமில்லாமல், இந்தியாவின் பல பகுதிகளிலும் இதே போன்ற வரவேற்பு பாகுபலிக்கு கிடைத்துள்ளது. தென்னிந்தியப் படம் ஒன்றுக்கு இந்தியா முழுவதும் இப்படி ஒரு வரவேற்பு கிடைப்பது இதுவே முதல்முறை. இந்தி பெல்ட் என வர்ணிக்கப்படும் வட இந்தியாவின் 5 மாநிலங்களில் மட்டும் 700-க்கும் அதிகமான அரங்குகளில் பாகுபலியை வெளியிட்டுள்ளனர்.
மகிழ்ச்சியில் ராஜமவுலி
பாகுபலி தமிழ்ப் பதிப்புக்கு எத்தகைய வரவேற்பு கிடைக்கப் போகிறது என்பதை மிக ஆர்வத்துடன் கவனித்து வந்த ராஜமவுலிக்கு, இன்றைய நிலவரம் மிகவும் மகிழ்ச்சியைத் தந்துள்ளது.
முதல் காட்சி முடிந்து, ரசிகர்களின் கருத்துகள் வர ஆரம்பித்துவிட்டன. இனி அவற்றைப் பார்ப்போம்.