“ஷாருக்கான் சொன்ன அந்த வார்த்தையால தான் நானும் நடிக்க வந்தேன்”: விஜய் தேவரகொண்டா சொன்ன சீக்ரெட்

ஐதராபாத்: தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா நடித்துள்ள 'லைகர்' திரைப்படம் நாளை (ஆக.25) வெளியாகிறது.

விஜய் தேவரகொண்டாவின் முதல் பான் இந்தியா படமாக 'லைகர்' உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

விஜய் தேவரகொண்டா சினிமாவில் நடிக்க வந்தது குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.

எதிர்பார்ப்பின் உச்சத்தில் லைகர்

எதிர்பார்ப்பின் உச்சத்தில் லைகர்

தெலுங்குத் திரைப்படங்களில் சிறுசிறு பாத்திரங்களில் நடித்து வந்த விஜய் தேவரகொண்டா, 'அர்ஜுன் ரெட்டி' படத்திற்கு பின்னர் ஸ்டார் நட்சத்திரமாக உருவெடுத்தார். தொடர்ந்து சூப்பர் ஹிட் படங்களில் நடித்த விஜய் தேவரகொண்டாவிற்கு, தெலுங்கில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். சினிமாவில் யாருடைய உதவியும் இல்லாமல், மிக எளிமையான குடும்ப பின்னணியில் இருந்து அறிமுகமான விஜய் தேவரகொண்டா இன்று ஜொலித்து வருகிறார்.

பாய்காட் செய்யப்பட்ட லைகர்

பாய்காட் செய்யப்பட்ட லைகர்

பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா, அனன்யா பாண்டே, மைக் டைசன், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள 'லைகர்' நாளை (ஆக.25) வெளியாகிறது. விஜய் தேவரகொண்டா குத்துச்சண்டை வீரராக நடித்துள்ள லைகர், பான் இந்தியா படமாக வெளியாகவுள்ளது. இதனால், 'லைகர்' படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு காணப்படுகிறது. அதேநேரம் பாய்காட் பிரச்சினையிலும் சிக்கித் தவித்து வருகிறது.

முடிந்தால் தடுத்துப் பாருங்கள்!

முடிந்தால் தடுத்துப் பாருங்கள்!

பாலிவுட்டில் இருந்து தொடங்கிய பாய்காட் கலாச்சாரம், இப்போது மெல்ல மெல்ல 'லைகர்' படத்தையும் பாடாய்படுத்தி வருகிறது. நெட்டிசன்களும் தொடர்ந்து 'லைகர்' படத்தை ட்ரோல் செய்து வருகின்றனர். இதனால், 'லைகர்' படத்தின் வசூலில் பாதிப்பு ஏற்படும் என சொல்லப்படுகிறது. இதனிடையே பாய்காட் குறித்து கருத்து தெரிவித்துள்ள விஜய் தேவரகொண்டா, "யார் என்ன வேண்டுமானாலும் செய்யட்டும். லைகர் படம் நிச்சயம் வெற்றி பெறும்" என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ஷாருக்கான் தான் காரணம்

ஷாருக்கான் தான் காரணம்

இந்நிலையில், சினிமாவில் நடிக்க வந்தது குறித்தும் விஜய் தேவரகொண்டா மனம் திறந்து பேசியுள்ளார். அதில், "எந்த சப்போர்ட்டும் இல்லாமல் சினிமாவில் அறிமுகமாக தயக்கம் இருந்தது. ஆனால்; ஒருமுறை ஷாருக்கான் தன்னைத் தானே கடைசி சூப்பர் ஸ்டார் என சொல்லியிருந்தார். அதை பார்த்ததும் தான் சினிமாவில் நடிக்கும் ஆர்வம் அதிகம் ஏற்பட்டது, ஷாருக்கானைப் போல நாமளும் ஏன் மாறமுடியாது என்ற கேள்விதான், என்னையும் இந்த இடத்தில் நடிகனாக நிற்க வைத்துள்ளது" எனக் கூறியுள்ளார். பாலிவுட் பாட்ஷா என கொண்டாடப்படும் ஷாருக்கானும், எந்த துணையும் இல்லாமல் சினிமாவில் அறிமுகமாகி, இன்று ராஜபாட்டை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X