Don't Miss!
- Technology கேபிள் டிவி கதையை முடிச்சு விட்ட அம்பானி! இனி மாசத்துக்கு வெறும் ரூ.29 தான்.. 2 JioCinema திட்டங்கள் அறிமுகம்!
- News சனாதன ஒழிப்பு, மத வெறுப்பு, கோயில்கள் இடிப்பு வேண்டாமே! முதல்வர் ஸ்டாலினுக்கு இந்து முன்னணி கோரிக்கை
- Lifestyle திருப்பதிக்கு செல்லும் பக்தர்களுக்கு ஹப்பி நியூஸ்.. ஐஆர்சிடிசி அறிவித்த டூர் பேக்கேஜ்.. இதோ முழு விவரம்..!
- Sports தமிழக வீரரால் நடந்த மாற்றம்.. குஜராத் அணிக்கு ஆப்பு வைத்த சுப்மன் கில்.. ஆட்டத்தை மாற்றிய ஒரு முடிவு
- Finance ஆதார் அட்டை தொலைஞ்சி போயிடுச்சா.. கவலை வேண்டாம்.. இதை மட்டும் பாலோ பண்ணுங்க..!
- Automobiles அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
'முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்வதாக அமைச்சர் உறுதி' - விஷால் நம்பிக்கை!
Recommended Video
சென்னை : தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் முன்னெடுப்பில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக ஸ்ட்ரைக் நடைபெற்று வருகிறது. டிஜிட்டல் கட்டண உயர்வை எதிர்த்து தமிழ் திரையுலகினர் கடந்த ஒரு மாதமாக புதிய படங்களை வெளியிடவில்லை.
கடந்த 20 நாட்களாக படப்பிடிப்பு மற்றும் அதுதொடர்பான மற்ற வேலைகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் பல தயாரிப்பாளர்களுக்கும் கோடிக்கணக்கில் நஷ்டமும், ஆயிரக்கணக்கானோர் வேலையையும் இழந்துள்ளனர்.
ஸ்ட்ரைக் இழுத்துக்கொண்டே செல்வது எல்லோருக்குமே பாதிப்பு என்பதால் ஸ்ட்ரைக்கை முடிவுக்கு கொண்டு வர அரசின் உதவியை நாடியிருக்கிறது திரையுலகம். இதுதொடர்பாக சினிமா துறைக்கு தனி வாரியம் அமைக்கப்படும் என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்திருந்தார்.
கடம்பூர் ராஜூவின் அறிவிப்புக்கு விஷால் தரப்பினர் நன்றி தெரிவித்திருந்தனர். இந்நிலையில் நேற்று கோட்டை நோக்கி பேரணி நடைபெறுவதாக இருந்தது. காவிரி, ஸ்டெர்லைட், நியூட்ரினோ தொடர்பான போராட்டங்கள் நடைபெற்று வருவதால் இந்த பேரணிக்கு ஏற்பாடு செய்யப்படவில்லை.
முதல்வரை சந்திக்க நேரம் கிடைக்காததால் நேற்று செய்தி மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூவை, விஷால் உள்ளிட்ட தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் சந்தித்துப் பேசினர். திரையுலகத்தில் நிலவி வரும் பிரச்னை குறித்து விரிவாக பேசியுள்ளனர்.
இந்தச் சந்திப்புக்கு பின்னர் பேசிய விஷால், "தயாரிப்பாளர் சங்கம், திரையரங்க உரிமையாளர்கள், டிஜிட்டல் ஒளிபரப்பு நிறுவனங்கள் அடங்கிய முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கு இரண்டு நாட்களில் ஏற்பாடு செய்வதாக அமைச்சர் உறுதி அளித்துள்ளார். இந்தப் பேச்சுவார்த்தையில் நல்ல தீர்வு கிடைக்கும் என நம்புகிறோம்" எனக் கூறியுள்ளார்.