“பொன்னியின் செல்வன்ல சவாலா இருந்ததே இது தான்”: குந்தவை த்ரிஷா எத சொல்லிருக்காங்கன்னு பாருங்க!

சென்னை: மணிரத்னம் இயக்கியுள்ள 'பொன்னியின் செல்வன்' படத்தில் குந்தவை கேரக்டரில் த்ரிஷா நடித்துள்ளார்.

விக்ரம், ஜெயம் ரவி ஆகியோருக்கு ஜோடியாக நடித்துள்ள த்ரிஷா, இந்தப் படத்தில் சகோதரியாக நடித்துள்ளார்.

பொன்னியின் செல்வன் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் இந்தப் படத்தில் நடித்த தனது அனுபவங்கள் குறித்து த்ரிஷா மனம் திறந்துள்ளார்.

சென்னையில் பொன்னியின் செல்வன் ப்ரோமோஷன்

சென்னையில் பொன்னியின் செல்வன் ப்ரோமோஷன்

மிகப் பிரம்மாண்டமான பொருட்செலவில் மணிரத்னம் இயக்கியுள்ள 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் செப்டம்பர் 30ம் தேதி வெளியாகிறது. பான் இந்தியா படமாக திரையரங்குகளில் வெளியாகவுள்ள பொன்னியின் செல்வன் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், நேற்று சென்னையில் நடைபெற்ற பொன்னியின் செல்வன் பத்திரிகையாளர்கள் சந்திப்பில், இயக்குநர் மணிரத்னம், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அப்போது பொன்னியின் செல்வன் படத்தில் நடித்த அனுபவம் குறித்து த்ரிஷா மனம் திறந்து பேசினார்.

குந்தவை கேரக்டரில் நடித்துள்ள த்ரிஷா

குந்தவை கேரக்டரில் நடித்துள்ள த்ரிஷா

பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் குந்தவை என்ற மிக முக்கியமான கேரக்டரில் த்ரிஷா நடித்துள்ளார். த்ரிஷாவின் கேரியரில் ரொம்பவே சிறப்பான கேரக்டராக குந்தவை இருக்கும் என சினிமா விமர்சகர்களும் ரசிகர்களும் கூறி வருகின்றனர். விக்ரம், ஜெயம் ரவி இருவருக்கும் சகோதரியாக த்ரிஷா நடித்துள்ள குறிப்பிடத்தக்கது. அதாவது விக்ரமுக்கு தங்கையாகவும் ஜெயம் ரவிக்கு அக்காவாகவும் த்ரிஷா நடித்துள்ளார். இதற்கு முன் வெளியான படங்களில் விக்ரம், ஜெயம் ரவி இருவருடனும் காதலியாக டூயட் பாடியுள்ள த்ரிஷா, பொன்னியின் செல்வனில் சகோதரியாக நடித்துள்ளார்.

மணிரத்னத்துக்கு தான் நன்றி சொல்லணும்

மணிரத்னத்துக்கு தான் நன்றி சொல்லணும்

பொன்னியின் செல்வன் படத்தில் விக்ரம் ஆதித்த கரிகாலனாகவும், ஜெயம் ரவி அருள்மொழி வர்மனாகவும் நடித்துள்ளனர். இந்நிலையில், சென்னையில் நடைபெற்ற பொன்னியின் செல்வன் படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் த்ரிஷா பேசினார். "இந்தப் படத்தில் விக்ரமுக்கு தங்கையாகவும், ஜெயம் ரவிக்கு அக்காவாகவும் நடிக்க வைத்ததற்கு இயக்குநர் மணிரத்னத்துக்கு நன்றி சொல்ல வேண்டும். இந்தப் படத்தில் நடித்த பிறகு அண்ணன் - தங்கை, அக்கா - தம்பி என்ற உணர்வு தான் ஏற்பட்டது. இது எனக்கு சவாலாக இருந்தது" எனக் கூறினார்.

செந்தமிழில் பேசி நடிப்பது தான் கஷ்டம்

செந்தமிழில் பேசி நடிப்பது தான் கஷ்டம்

தொடர்ந்து பேசிய த்ரிஷா, "சரித்திரப் பின்னணியில் உருவாகியுள்ள 'பொன்னியின் செல்வன்' படத்தில் செந்தமிழில் பேசி நடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. வசனங்கள் எதுவும் வாயில் நுழையவே இல்லை. தமிழே கஷ்டம், செந்தமிழ் அதைவிட கஷ்டம். ஆனாலும் அப்படி பேசி நடித்தது மகிழ்ச்சியாக உள்ளது" என த்ரிஷா கூறினார். விக்ரம், ஜெயம் ரவியுடன் ஜோடியாக நடித்துள்ள த்ரிஷா, முதன்முறையாக அவர்களுக்கு சகோதரியாக நடித்துள்ளதை பார்க்க ரசிகர்களும் ஆர்வமாக உள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X