Don't Miss!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Automobiles "ஐ லவ் யூ" சொல்ல ஆட்டோ பைலட் மோடை பயன்படுத்திய விமானி! யாரு சாமி இவரு
- News கோதுமை பீர்.. ஒரே ஒரு பீர் பாட்டில் விலை இவ்வளவா? இப்பவே குஷியில் குடிமகன்கள்.. ஆனாலும் "இடிக்குதே"
- Finance டெக் மஹிந்திரா முன்னாள் சிஇஓ சிபி.குர்னானி துவங்கிய புது கம்பெனி.. வியந்துபோன ஐடி ஊழியர்கள்..!
- Lifestyle வெளிநாட்டினர் ஏன் பால் சேர்க்கப்பட்ட காபிக்கு பதிலாக எப்போதும் ப்ளாக் காபி மட்டும் குடிக்கிறார்கள் தெரியுமா?
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Sports இன்னும் 6 போட்டிகள் இருக்கு.. என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.. பிளே ஆஃப் பற்றி ஆர்சிபி வீரர் ஜாக்ஸ்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
திருமணமான ஒரே ஆண்டில் தெலுங்கு டிவி நடிகரின் மனைவி தூக்கு போட்டு தற்கொலை
விசாகப்பட்டினம்: பிரபல தெலுங்கு டிவி நிகழ்ச்சியான ஜபர்தஸ்த் மூலம் பிரபலமான நகைச்சுவை நடிகர் பொட்டி ரமேஷின் மனைவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பிரபல தெலுங்கு டிவி நிகழ்ச்சியான ஜபர்தஸ்த் மூலம் பிரபலமான நகைச்சுவை நடிகர் பொட்டி ரமேஷ். அவருக்கும் திரிபுரம்பிகா(22) என்ற பெண்ணுக்கும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 12ம் தேதி திருமணமானது.
இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை இரவு திரிபுரம்பிகா விசாகப்பட்டினத்தில் உள்ள வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். திரிபுரம்பிகா மின்விசிறியில் தூக்கு போட்டு தொங்கிக் கொண்டிருந்ததை ரமேஷின் சகோதரி பார்த்துவிட்டு அலறினார்.
உடனே குடும்பத்தார் வந்து கதவை உடைத்து திரிபுரம்பிகாவை அருகில் உள்ள மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
ஹைதராபாத்தில் ஷூட்டிங்கில் இருந்த ரமேஷ் மனைவி இறந்த தகவல் கிடைத்தவுடன் விசாகப்பட்டினம் வந்தார். ரமேஷின் குடும்பத்தார் தங்களின் மகளை கொடுமைப்படுத்தி வந்ததாக திரிபுரம்பிகாவின் பெற்றோர் போலீசில் புகார் அளித்துள்ளனர்.
இது குறித்து ரமேஷ் குடும்பத்தார் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.