Don't Miss!
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Sports ஒய்டு கொடுத்த நடுவர்.. ரிவ்யூ கேட்ட பும்ரா.. சந்தேகமாய் பார்த்த ஹர்திக்.. கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
- Lifestyle தழும்புகள் உங்க சருமத்தை அசிங்கமா காட்டுகிறதா? இந்த எளிய வீட்டு வைத்தியங்களை யூஸ் பண்ணுங்க..சீக்கிரம் மறையும்!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- News அரவிந்த் கெஜ்ரிவாலை சிறையில் கொல்ல சதித்திட்டம்? இன்சூலின் கொடுக்க மறுப்பு? பகீர் கிளப்பிய அதிஷி
- Automobiles படகு மாதிரி மிதந்து சென்ற ரூ2.44 கோடி கார்! இவ்வளவு வெள்ளத்துலயும் சின்ன டேமேஜ் கூட ஆகலயே!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
சின்னத்திரை நடிகர் சங்கத்தில் பிரச்சினை... ‘சின்னப்பாப்பா’ விற்கு எதிராக போர்க்கொடி
சென்னை: நடிகர் சங்கம் என்றாலே பிரச்சினைதான் என்றாகிவிட்டது இப்போது. சினிமா நடிகர் சங்க தேர்தலில் ஏற்பட்டுள்ள பிரச்சினை உலகறிந்த ரகசியமாக இருக்கிறது. இப்போது சின்னத்திரை நடிகர் சங்கத்திலும் புயல் உருவாகத் தொடங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சின்னத்திரை நடிகர்கள் சங்கத் தலைவராக பதவி வகிக்கும் நளினிக்கு சங்கத்தில் எதிர்ப்பு வலுத்து வருகிறது. அவரது நடவடிக்கைகளில் அதிருப்தி அடைந்த சங்கத்தின் பொருளாளர் வி.டி.தினகர், துணைத் தலைவர் ராஜ்காந்த், இணை செயலாளர்கள் பாபூஸ், கன்யா பாரதி, மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் 16 பேர் தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.
சின்னத்திரை நடிகர் சங்க தேர்தல், 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுவது வழக்கம். தலைவராக இருந்த ராஜேந்திரன் மற்றும் நிர்வாகிகளின் பதவிக்காலம் முடிவுக்கு வந்ததை அடுத்து 2014-2017ம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் தேர்தல் கடந்த ஆண்டு நடைபெற்றது. 1,300 உறுப்பினர்கள் கொண்ட இந்த சங்கத்தில், 700க்கு மேற்பட்ட நடிகர், நடிகைகள் வாக்களித்தனர். இதில் நளினி வெற்றி பெற்று தலைவியாக கடந்த ஆண்டு பொறுப்பேற்றார்.
கோஷ்டி பூசல்
ஆனால் நளினி தலைமையிலான நிர்வாகிகள் மீது சின்னத்திரை நடிகர்களுக்கு அதிருப்தி உள்ளது. நளினி நடிப்புக்குதான் முக்கியத்துவம் கொடுக்கிறார். சங்க பிரச்னைகளுக்கு முக்கியத்தும் தருவதில்லை என்றும், தன்னிச்சையாக முடிவெடுக்கிறார் என்றும் குற்றச்சாட்டு எழுந்தது. நடிகர் சங்கத் தேர்தலில் அவரை எதிர்த்து போட்டியிட்டு தோற்றவர்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள... சின்னத்திரை நடிகர் சங்கத்தில் தற்போது இரண்டு கோஷ்டிகள் உருவானது.
திடீர் ராஜினாமா
இந்த நிலையில் தலைவர் நளினி, துணை தலைவர் மனோபாலா, செயலாளர் பூவிலங்கு மோகன், இணை செயலாளர் பாவனா ஆகியோர் கடந்த மே மாதம் திடீரென தங்கள் பதவியை ராஜினாமா செய்தார்கள். ராஜினாமா செய்தனர். தற்போதுள்ள சூழ்நிலையில் எந்த பிரச்னையும் வேண்டாம் பதவியை தொடருங்கள் என்று பலரும் வற்புறுத்தியதை தொடர்ந்து ராஜினாமாவை வாபஸ் பெற்றனர்.
16 பேர் ராஜினாமா
இந்த நிலையில், துணைத் தலைவர் ராஜ்காந்த், செயற்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட 16 பேர் தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். அவர்கள் நளினிக்கு அனுப்பி உள்ள ராஜினாமா கடிதத்தில், சின்னத்திரை நடிகர்கள் நலன் காக்க தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றோம். ஆனால் உறுப்பினர்களுக்கு அளித்த வாக்குறுதிப்படி கடந்த ஓராண்டாக அவர்களுக்கு எதுவும் செய்ய முடியவில்லை. அதற்கான முயற்சியையும் நீங்கள் எடுக்கவில்லை. இதைக்கேட்டால் ராஜினாமா செய்வேன் என்று மிரட்டுகிறீர்கள். பொது கருத்தை அறியாமல் தங்களுக்கு நெருக்கமான இருவரின் ஆலோசனைப்படி தன்னிச்சையாக முடிவெடுக்கிறீர்கள்.
மீண்டும் தேர்தல் நடத்த வாய்ப்பு
தொடர்ந்து தாங்கள் தன்னிச்சையாகவும், அதிகாரத்துடனும் நடந்து வருவதால் உங்கள் தலைமையின் கீழ் உறுப்பினர்களுக்கு எந்த நன்மையும் செய்ய முடியாது என்பதால் ராஜினாமா செய்கிறோம். பெரும்பாண்மையானவர்கள் ராஜினாமா செய்வதால் உடனடியாக தேர்தல் நடத்த ஏற்பாடு செய்யுங்கள். இவ்வாறு தங்கள் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.
-
மவனே யாருகிட்ட.. மேனேஜரை அலறவிட்ட கார்த்திக்..என்னாச்சு தெரியுமா? கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!
-
மறக்கமுடியுமா சின்னக் கலைவாணரை.. விவேக்கின் 3ம் ஆண்டு நினைவு தினம்.. செடிகளை நடும் செல் முருகன்!
-
சூரியன் படத்துல சரத்குமாருக்கு பதில் இவரா?.. கவுண்டமணி சரியான நக்கல் புடிச்ச ஆளு.. பவித்ரன் பேட்டி!