Don't Miss!
- News
பட்ஜெட்டில் "முக்கிய" அறிவிப்பு.. அடையாள ஆவணம் ஆகும் பான் கார்டு.. நிதி பரிவர்த்தனைக்கு கட்டாயம்!
- Technology
மலிவு விலையில் 28 நாட்கள் வேலிடிட்டி உடன் புதிய திட்டத்தை அறிமுகம் செய்து அதிரடி காட்டிய Vodafone Idea!
- Sports
மொத்த ப்ளானையும் மாத்துங்க.. நியூசி, உடனான 3வது டி20 போட்டி.. தினேஷ் கார்த்திக் முக்கிய அறிவுரை!
- Finance
மத்திய பட்ஜெட் 2023: மோடி அரசின் 7 முன்னுரிமைகள் - நிர்மலா சீதாராமன்
- Automobiles
இந்த மாதிரி டபுள்-டக்கர் பேருந்து எல்லாம் வந்தா நம்ம சென்னை வேற லெவல் ஆயிடும்!! அதுவும் எலக்ட்ரிக் தரத்தில்...
- Lifestyle
பட்ஜெட் 2023: இந்த ஆண்டு சிவப்பு நிற கைத்தறி புடவையில் பட்ஜெட் தாக்கல் செய்யும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
கண்டித்தும் கள்ளத்தொடர்பை கைவிடாததால், டிவி நடிகர் சரமாரியாக வெட்டிக் கொலை.. 'நண்பர்' கைது!
சென்னை: கள்ளத் தொடர்பை கைவிடாததால் டிவி நடிகரை வெட்டி கொலை செய்ததாக கைது செய்யப்பட்ட இலங்கை அகதி தெரிவித்துள்ளார்.
Recommended Video
சென்னை எம்.ஜி.ஆர் நகரில் வசித்து வந்தவர், செல்வரத்தினம். வயது 45. இலங்கையைச் சேர்ந்த இவர், தனது மனைவி மற்றும் 3 குழந்தைகளுடன் வசித்து வந்தார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும், தேன்மொழி பி.ஏ. ஊராட்சி மன்றத் தலைவர் என்ற தொடரில் மெயின் வில்லனாக நடித்து வந்தார்.

அகதிகள் முகாம்
மேலும் சில தொடர்களில் நடித்துள்ளார். கொரோனா காரணமாக விருதுநகரில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் மனைவி மற்றும் குழந்தைகளை தங்க வைத்தார். அவர்கள் அங்கு வசிக்கின்றனர். செல்வரத்தினம் மட்டும், எம்.ஜி.ஆர் நகரில் தங்கியிருந்து டிவி தொடரில் நடித்து வந்துள்ளார்.

சரமாரியாக வெட்டு
இந்நிலையில், நேற்றுமுன் தினம் அதிகாலை தனது வீட்டின் அருகே, நண்பர் ஒருவருடன் பேசிக் கொண்டிருந்தபோது, ஆட்டோவில் வந்த நான்கு பேர், செல்வரத்தினத்தை சரமாரியாக வெட்டி சாய்த்தனர். இதில் செல்வரத்தினம், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சத்தம் கேட்டு, அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர்.

பெண் ஒருவருடன்
அதற்குள்
வெட்டியவர்கள்
தப்பி
ஓடிவிட்டனர்.
இதுபற்றி
எம்.ஜி.ஆர்.
நகர்
போலீசார்
விசாரணை
நடத்தி
வந்தனர்.
செல்வரத்தினம்
செல்போனை
கைப்பற்றி
ஆய்வு
செய்தபோது,
செல்வரத்தினம்,
விருதுநகர்
அகதிமுகாமில்
உள்ள
பெண்
ஒருவருடன்
அடிக்கடி
பேசியதை
வைத்து
விசாரணை
நடத்தினர்.

பெண்ணின் கணவர்
அந்தப் பெண்ணின் கணவர்தான் நண்பர்களுடன் சேர்ந்து செல்வரத்தினத்தை கொலை செய்தது உறுதியானது. தனிப்படை போலீசார் அந்தப் பெண்ணின் கணவர் விஜயகுமார் (38) என்பவரை கைது செய்தனர். அவர் அளித்த வாக்குமூலம் குறித்து போலீசார் கூறியதாவது:

அடிக்கடி தகராறு
விருதுநகர் அகதிகள் முகாமில் செல்வரத்தினம் வீட்டின் அருகே அவர் நண்பர் விஜயகுமார் வசிக்கிறார். அவர் மனைவி டயானாவுடன் செல்வரத்தினத்துக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் கணவன்- மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதை விஜயகுமார் பலமுறை கண்டித்தும் கள்ளத் தொடர்பை கைவிடவில்லை.

மனைவிக்கு தெரியாமல்
தீபாவளி அன்று விருதுநகரில் உள்ள உறவினர் வீட்டிற்கு செல்வதாக விஜயகுமாரிடம் கூறிவிட்டு செல்வரத்தினத்தை பார்க்க சென்னைக்கு டயானா வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த விஜயகுமார், தனது மனைவிக்கு தெரியாமல் சென்னை வந்துள்ளார். இரவு முழுவதும் செல்வரத்தினத்தின் வீட்டின் அருகே காத்திருந்து அதிகாலையில் நண்பர்களுடன் சேர்ந்து அவரை வெட்டி கொலை செய்துள்ளார். இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.