Don't Miss!
- Sports அடுத்தடுத்த வீழ்ந்த 2 வீரர்கள்.. சிஎஸ்கே பேட்டிங் வரிசையில் நடந்த மாற்றம்.. ஜடேஜா கொடுத்த சர்ப்ரைஸ்!
- News தமிழகத்தில் 72% வாக்குப்பதிவு! 2019இல் தேர்தலில் பதிவான வாக்குகள் எவ்வளவு - தொகுதி வாரியான விவரம்
- Technology ஆத்தாடி.. ஒரே போனை வைத்து.. இந்தியாவில் சம்பவம் செய்ய பார்க்கும் Samsung.. பட்ஜெட்ல அறிமுகமாகும் புது Mobile..
- Finance தூத்துக்குடி நிறுவனத்தை அலேக்கா வாங்கிய அதானி.. மாஸ்டர் பிளான் உடன் களமிறங்கிய கௌதம் அதானி..!!
- Lifestyle நீங்கள் குழந்தைகளுக்கு செர்லாக் உணவளிக்கிறீர்களா? இனி கவனமாக இருங்கள்..!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
- Automobiles ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
மீண்டும் முழு ஊரடங்கு.. வரும் 19 ஆம் தேதி முதல், சின்னத்திரை படப்பிடிப்பு ரத்து..பெப்சி அறிக்கை!
சென்னை: ஊரடங்கு மீண்டும் பிறப்பிக்கப்பட்டுள்ளதால், சினிமா போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் மற்றும் சின்னத்திரை படப்பிடிப்புகள் நிறுத்தப்படுவதாக பெப்சி தெரிவித்துள்ளது.
கொரோனா, நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது. தமிழகத்தில் சென்னையிலும் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட பகுதிகளிலும் கொரோனா பரவல் அதிகரித்து இருக்கிறது.
இதைத் தடுக்க ஊரடங்கை மீண்டும் கடுமையாக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு பரிந்துரைகளை அரசுக்கு நிபுணர் குழு கடந்த சில நாட்களுக்கு முன் அளித்தது.
சியான் 60.. இதுதான் டைட்டிலா.. வெளியான அந்த தகவல்.. ரசிகர்கள் மத்தியில் எழுந்த குழப்பம்?
முழு ஊரடங்கு
இதையடுத்து தமிழக அரசு, கொரோனா பரவல் அதிகரிப்பதை தடுக்க, சென்னையில் வரும் 19- ஆம் தேதி முதல், 30 ஆம் தேதி வரை 12 நாட்கள் முழு ஊரடங்கை மீண்டும் பிறப்பித்துள்ளது. செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களுக்கும் இந்த முழு ஊரடங்கு பொருந்தும். இதனால் சென்னையில் நடைபெற்று வந்த சுமார் 34 சின்னத்திரை தொடர்களின் படப்பிடிப்பு நிறுத்தப்படுகிறது.
பெப்சி அறிக்கை
சினிமா போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நிறுத்தப்படுகின்றன. இதுபற்றி தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் (பெப்சி) அறிக்கை வெளியிட்டுள்ளது. தலைவர் ஆர்.கே.செல்வமணி, பொதுச்செயலாளர் அங்கமுத்து சண்முகம், பொருளாளர் சுவாமிநாதன் இணைந்து வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது: வரும் 19 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி சின்னத்திரை படப்பிடிப்புகள், போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளை நிறுத்தி வைக்க முடிவு செய்துள்ளோம்
வேண்டுகோள்
அமைப்பு சாரா தொழிலாளர்களின் நிலை உணர்ந்து அவர்களையும் திரைப்பட தொழிலாளர்களோடு ஒன்றிணைத்து, கருணையோடு மூன்றாவது முறையாக நிவாரணம் அளித்த முதல்வருக்கு நன்றி. திரைப்படத் துறையினருக்கு ஏதாவது ஒரு வகையில் உதவுமாறு பிரதமர் மற்றும் நிதி அமைச்சருக்கு கடந்த 3 மாதங்களுக்கு மேலாக வேண்டுகோள் விடுத்த வண்ணம் உள்ளோம்.
மத்திய அரசு
கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டெழ, ரூ.20 லட்சம் கோடியை மத்திய அரசு நிவாரணமாக அறிவித்துள்ளது. அதில் திரைப்படத்துறைக்கோ, தொழிலாளர்களுக்கோ எந்த தொகையும் அறிவிக்கப்படவில்லை என்பதை வருத்தத்துடன் குறிப்பிடுகிறோம். மத்திய அரசு எவ்வித நிவாரணமும் அளிக்காதது வருத்தத்தை அளிக்கிறது. திரைத்துறைக்கு நிவாரணம் அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.