போருக்கான நேரம் வந்துவிட்டது, வாங்க சார்: ரஜினியை வறுத்தெடுக்கும் நெட்டிசன்ஸ்
சென்னை: கேளிக்கை வரி குறித்து வாய்ஸ் கொடுத்துள்ள ரஜினிகாந்தை மக்கள் சமூக வலைதளங்களில் வறுத்தெடுத்து வருகிறார்கள்.
திரையரங்குகளுக்கு விதிக்கப்பட்டுள்ள 30 சதவீத கேளிக்கை வரியை ரத்து செய்யக் கோரி தமிழகம் முழுவதும் உள்ள திரையங்கு உரிமையாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் கேளிக்கை வரியை ரத்து செய்யக் கோரி தமிழக அரசுக்கு ரஜினிகாந்த் ட்விட்டர் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.

கோபம்
தமிழகத்தில் கதிராமங்கலம் உள்ளிட்ட எந்த போராட்டம் பற்றியும் கண்டு கொள்ளாத ரஜினிகாந்த் சினிமா துறைக்கு ஒன்று என்றதும் முந்திக் கொண்டு வாய்ஸ் கொடுத்துள்ளது பொது மக்களை கோபம் அடைய வைத்துள்ளது.
சப்போர்ட்
இவங்க பிரச்சனை நம்ம சப்போட் பன்ன வரனும் நம்ம பிரச்சனை இவங்க ஒரு நாள் உண்ணா விரதம்னு ஏசில உக்காத்துண்டு நம்ம போரட்டத்த அசிங்க படுத்திட்டு போ
போர்
நாளை சாலைக்கு வந்து போராட்டத்தை துவங்குங்கள் ஜி. போருக்கான நேரம் வந்துவிட்டது
ரஜினி சார்
ஊற ஏமாத்ர தலைவர் நெறைய பேர் இருக்காங்க அதையே பண்ண நீங்க எதுக்கு ரஜினி சார்
கதிராமங்கலம்
அப்டியே கதிராமங்கலம் கிராமத்தை பத்தி 2 வரி சொல்லுங்க...
சிஸ்டம்
நமக்கு நம்ம தொழில் நல்லா இருக்கனும் எவன் செத்தாலும் பரவாயில்லை
இப்போம் மேல உள்ள சிஸ்டம் சரியா இருக்கா ?
ஐயா ?
ரியாக்ஷன்
ரஜினிகாந்த் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தது குறித்து ஒருவர் மீம்ஸ் போட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











