பிக் பாஸ் வீட்டில் 2 பச்சோந்திகள்: ஒன்னு ஜூலி, இன்னொன்னு...
சென்னை: பிக் பாஸ் வீட்டில் ஒன்று இல்லை இரண்டு பச்சோந்திகள் உள்ளன.
பிக் பாஸ் நிகழ்ச்சி துவங்கிய புதிதில் அதை கழுவிக் கழுவி ஊத்தியவர்கள் கூட தற்போது அதை தவறாமல் பார்த்து வருகிறார்கள். பிக் பாஸ் வீட்டில் உள்ளவர்கள் பணத்திற்காக நடிக்கிறார்கள் என்பதையே பார்வையாளர்கள் மறந்துவிட்டனர்.
ஏதோ தங்கள் வீட்டில் நடப்பது போன்று நினைத்து ஃபீல் செய்கிறார்கள்.

ஜூலி
நேரத்திற்கு தகுந்தது போன்று மாறுவதில் ஜூலியை விட வல்லவர் பிக் பாஸ் வீட்டில் யாரும் இல்லை. எந்த பார்வையாளர்கள் தலையில் தூக்கி வைத்து கொண்டாடினார்களோ அவர்களே தற்போது ஜூலியை கேவலமாக திட்டி வருகிறார்கள்.

பிக் பாஸ்
பிக் பாஸ் நிகழ்ச்சி துவங்கியபோது அது ஜூலிக்காக தான் ஓடியது என்று அனைவரும் கூறினார்கள். அந்த அளவுக்கு பார்வையாளர்கள் ஜூலி மீது முன்பு மரியாதை வைத்திருந்தனர்.

நாடகம்
பிக் பாஸ் வீட்டில் பொய் மேல் பொய் சொல்வது, திடீர் திடீர் என சீன் போடுவது, ஓவர் ஆக்டிங் செய்து அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பது போன்ற வேலைகளில் ஜூலி ஈடுபட்டு அவரின் பெயரை கெடுத்துக் கொண்டார்.

ஆரவ்
ஜூலியை போன்றே ஆரவும் ஒரு பச்சோந்தி தான். ஓவியாவிடம் கடலை போட்டுவிட்டு அவரை பற்றியே பிறரிடம் தவறாக பேசினார். தற்போது ஓவியாவுக்கு ஆதரவு அதிகரித்துள்ளது தெரிந்து அவருக்கு சப்போர்ட் செய்கிறார்.


Click it and Unblock the Notifications











