என்னை அறிந்தால்... கவுதம் மேனனுக்காக ஒன்று, அஜீத் திருப்திக்காக இன்னொன்று!
அஜீத்தின் என்னை அறிந்தால் படம் பொங்கலுக்கு வெளியாகிவிடும் என்று இரண்டு மாதங்களாகக் கூறி வந்தனர். விளம்பரங்களும் வெளியிட்டனர்.
ஆனால் திடீரென்று படத்தை ஒரு மாதம் தள்ளிப் போட்டனர். காரணம் கேட்டபோது, ஆளுக்கொன்றாகச் சொன்னார்கள்.

அதில் ஒன்று இயக்குநர் கவுதம் மேனன் வைத்துள்ள க்ளைமாக்ஸில் அஜீத்துக்கு அவ்வளவாக உடன்பாடில்லை என்றும், வேறு சில காட்சிகளையும் ரீஷூட் பண்ணப் போவதாகவும், அதனால்தான் இப்படி தள்ளிப் போனது என்றார்கள்.
இப்போது அது கிட்டத்தட்ட உண்மை என்பதுபோல, வேறொரு செய்தி வெளியாகியுள்ளது.
இப்படத்திற்கு இரண்டு கிளைமாக்ஸ் வைத்திருப்பதாக செய்தி பரவி வருகிறது. கவுதம் மேனன் ஏற்கெனவே வைத்த க்ளைமாக்ஸ் ஒன்றும், மாற்றுக் கிளைமாக்ஸாக இன்னொன்றும் வைத்துள்ளார்களாம்,
முதல் நாளில் மக்கள் விருப்பத்தைப் பொருத்து க்ளைமாக்ஸ் மாறும் என்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











