Don't Miss!
- News மணல் கொள்ளை விவகாரம்.. ED - விசாரணைக்கு 5 மாவட்ட ஆட்சியர்கள் இன்று ஆஜர்?
- Sports தமிழக வீரரால் நடந்த மாற்றம்.. குஜராத் அணிக்கு ஆப்பு வைத்த சுப்மன் கில்.. ஆட்டத்தை மாற்றிய ஒரு முடிவு
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் நிகழும் குரு சுக்கிர சேர்க்கை: மே மாசம் இந்த 3 ராசிக்கு தொழில் பிரகாசிக்கப் போகுது..
- Finance ஆதார் அட்டை தொலைஞ்சி போயிடுச்சா.. கவலை வேண்டாம், இதை மட்டும் பாலோ பண்ணுங்க..!
- Technology மினிமம் பேலன்ஸ் விதிகள்.. மே.1 முதல் அமல்.. உங்க அக்கவுண்ட்டில் ரூ.5000 வேண்டும்.. எந்த வங்கிக்கு எவ்வளவு?
- Automobiles அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
ஆட்டோ டிரைவரால் விபச்சாரம்: உதயஸ்ரீ
சென்னை:சினிமா வாய்ப்புக்காக தருவதாகக் கூறி ஏமாற்றி என்னை விபச்சாரத்தில் தள்ளிவிட்டனர் என டிவி நடிகை உதயஸ்ரீ கூறியுள்ளார்.
சென்னையில் விபச்சார ஒழிப்பு தனிப்படை போலீஸார் புரோக்கர்கள் 4 பேரை கைது செய்தனர். இவர்களால் விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட டிவி நடிகை உதயஸ்ரீ உள்ளிட்ட 3 பேரை மீட்டனர்.
உதயஸ்ரீ தனது வாக்குமூலத்தில்,
எனக்கு சொந்த ஊர் சென்னைதான். 16 வருடங்களுக்கு முன் திருமணம் நடந்ததது. 10 வயதிலும், 8 வயதிலும் மகன்கள் உள்ளனர்.
எனக்கும் என கணவருக்கும் பிரச்சனை ஏற்பட்டதால் பிரிந்து விட்டோம். வருமானத்திற்காக தொலைக்காட்சி தொடர்களில் துணை நடிகையாக நடித்தேன். ஊர்வம்பு உள்ளிட்ட பல தொடர்களில் நடித்துள்ளேன்.
அப்போது ஆட்டோ டிரைவர் பாலகிருஷ்ணனுக்கும் எனக்கும் பழக்கம் ஏற்பட்டது. அவர் தனக்கு பல சினிமா தயாரிப்பாளர்களை தெரியும். நடிக்க வாய்ப்பு வாங்கி தருகிறேன். ஆனால் அதற்கு சில தயாரிப்பாளர்களை திருப்திபடுத்த வேண்டும் என்றார். நானும் சரி என ஒப்புக் கொண்டேன்.
அவர்தான் என்னை விபசாரத்தில் ஈடுபடுத்தினார். என் குழந்தைகள் படிக்க வேண்டும் என்பதற்காக வேறு வழியில்லாமல் நானும் இதில் ஈடுபட்டேன் என்றார்.
இப்போது மைலாப்பூரிலுள்ள மகளிர் காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார் உதயஸ்ரீ.