Don't Miss!
- Finance
பட்ஜெட்டில் வெளியான 5 முக்கிய வருமான வரி மாற்றங்கள்.. சம்பளதாரர்களுக்கு பயனளிக்குமா?
- News
"பாஜக போட்டியிட்டால் நீங்களும் வாபஸா?".. செய்தியாளர் கேட்டதும் ஜெயக்குமார் தந்த பதிலை பாருங்க
- Automobiles
எல்லாரும் வாங்க கூடிய விலையில் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்! வர்ற 9ம் தேதி பெட்ரோல் வண்டிகளுக்கு எல்லாம் ஆப்பு!
- Lifestyle
தட்டுக்கடை முட்டை பிரியாணி செய்வது எப்படி தெரியுமா?
- Sports
ஆட்டத்தை மாற்றியது சுப்மன் கில் அல்ல.. சூர்யகுமாரின் அந்த செயல் தான்.. அதிர்ச்சி அடைந்த நியூசி வீரர்
- Technology
புது போன், Smart TV வாங்குற ஐடியா இருக்கா? 2024-க்குள் வாங்கிடுங்க.! நிர்மலா சீதாராமனே சொல்லிட்டாங்க.!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
மகளின் முதல் பாடலுக்கே தேசிய விருது.. பெருமிதத்தில் உன்னி கிருஷ்ணன்!
தன் மகள் உத்ரா பாடிய முதல் பாடலுக்கே தேசிய விருது கிடைத்ததில் ஏக மகிழ்ச்சியில் உள்ளார் பிரபல பின்னணி பாடகர் உன்னிகிருஷ்ணன்.
நேற்று அறிவிக்கப்பட்ட 62வது தேசிய விருதுகள் பட்டியலில், சிறந்த பாடகிக்கான விருது சைவம் படத்தில் இடம்பெற்ற அழகு.. பாடலைப் பாடிய உத்ராவுக்குக் கிடைத்தது.

10 வயது சிறுமி இவர். பிரபல பின்னணி பாடகர் உன்னிகிருஷ்ணனின் மகள்.
தமிழ் சினிமாவில் தன் மகள் பாடிய முதல் பாடலிலேயே உத்ரா முத்திரை பதித்துவிட்டது உன்னிகிருஷ்ணனைப் பெருமிதமடைய வைத்துள்ளது.
காதலன் படத்தில் வரும் 'என்னவளே அடி என்னவளே' என்ற பாடலை முதல் முறையாகப் பாடினார் உன்னிகிருஷ்ணன். அந்தப் பாடலுக்காக 1994 ஆம் ஆண்டு உன்னிகிருஷ்ணனுக்கு சிறந்த பின்னணி பாடகர் விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
"என் மகளின் முதல் பாடலுக்கே தேசிய விருது கிடைக்கும் என்று நான் எதிர்ப்பார்க்கவில்லை. இது கடவுளின் பரிசு," என்கிறார் உன்னிகிருஷ்ணன்.