ஹீரோ வில்லனாகிறார் ... வில்லன் ஹீரோவாகிறார்.. இது உறுமீன் 'கதை'!
சென்னை: ஜிகிர்தண்டா பட மிரட்டல் வில்லன் பாபி சிம்ஹா ஹீரோவாக நடித்து வரும் படம் உறுமீன். இப்படத்தில் மெட்ராஸ் பட புகழ் கலையரசன் வில்லனாக நடிக்கிறாராம்.
சூதுகவ்வும், நேரம், ஜிகிர்தண்டா உள்ளிட்ட படங்கள் மூலம் வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார் நடிகர் பாபி சிம்ஹா. அதிலும் குறிப்பாக ஜிகிர்தண்டா படத்தில் மிரட்டல் வில்லனாக நடித்திருப்பார்.
வில்லனாக மிரட்டிய பாபி இப்போது உறுமீன் படத்தில் நாயகனாக நடித்துக் கொண்டிருக்கிறார். பெருமாள் சாமி இயக்கும் இப்படத்தில், பாபியின் ஜோடியாக ரேஷ்மி மேனன் நடித்துள்ளார்.
உறுமீன் திரைப்படம் சிம்ஹாவுக்கு மட்டும் ஒரு திருப்புமுனையாக இல்லாமல், 'மெட்ராஸ்' பட புகழ் கலையரசனுக்கும் ஒரு திருப்புனையாக அமையப்போகிறது. மெட்ராஸ் படத்தில் சிறப்பான நடிப்பால் அதிகம் பாராட்டுகளைத் தட்டிச் சென்றவர் கலையரசன்.
இவர் இப்போது உறுமீன் திரைப்படத்தில் முக்கியமான வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இப்படத்தின் டிரைய்லர் இம்மாத இறுதியிலும், படம் மே மாதத்திலும் ரிலீஸ் செய்யப் படும் என எதிர்பார்க்கப் படுகிறது.


Click it and Unblock the Notifications












