Don't Miss!
- News
"சாம்பாரில்" கொட்டி கிடக்கும் நன்மைகள்.. பெருங்குடல் கேன்சரையே தடுக்குமாம்! வியக்கும் அமெரிக்கா
- Finance
Mukesh Ambani: மீண்டும் முதல் இடம்.. ஒரு வருட கௌதம் அதானி ஆதிக்கம் முடிந்தது.. 16வது இடம்..!
- Sports
ஐபிஎல் தொடரால் ஆபத்து.. இந்திய அணியா? ஐபிஎல் அணியா எது முக்கியம்.. ரவி சாஸ்திரி கொடுத்த எச்சரிக்கை
- Lifestyle
உங்க பிறந்த தேதி 8,17 மற்றும் 26 இதுல ஒன்னா? அப்ப உங்க எதிர்காலம் எப்படி இருக்கப்போகுது தெரியுமா?
- Automobiles
சான்ஸே இல்ல... ஃபார்முலா 1 கார்களின் டயர்கள் அதன்பின் இதற்கு யூஸ் பண்ண படுகிறதா!! யாராலயும் யூகிக்கவே முடியாது
- Technology
இலவச Jio True 5G இனி கடலூர், திண்டுக்கல் உட்பட மொத்தம் 8 நகரங்களில்.! உங்க ஊர் இதில் உள்ளதா?
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
பிரபுதேவா படத்தில் இணையும் வாணி போஜன்...இதிலாவது காட்டுவீங்களா?
சென்னை : பிரபுதேவா நடிக்கும் புதிய படத்தில் வாணி போஜன் நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த படத்திலாவது வாணி போஜன் நடிக்கும் சீன்களை காட்டுவார்களா என ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.
வால்டர் படத்தை இயக்கிய டைரக்டர் அன்பு இயக்கும் கிரைம் த்ரில்லர் படத்தில் பிரபு தேவா நடிக்க போவதாக இந்த ஆண்டின் துவக்கத்தில் அறிவிக்கப்பட்டது. இந்த படத்திற்கு ரேக்லா என பெயரிடப்பட்டுள்ளது. தற்போது இந்த படத்தில் நடிகை வாணி போஜன் நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதோடு அவரின் கேரக்டர் பற்றிய விபரங்களையும் டைரக்டர் வெளியிட்டுள்ளார்.
2ம் நாளில் ராதே ஷ்யாம் வசூல் இப்படி பாதியா குறைஞ்சிடுச்சே.. அப்போ இதுக்கு மேல அவ்ளோ தானா?

பிரபுதேவாவிற்கு 2 ஜோடி
இது பற்றி டைரக்டர் அன்பு கூறுகையில், இந்த படத்தில் இரண்டு ஹீரோயின்கள். அதில் ஒன்றாக வாணி போஜனை தேர்வு செய்துள்ளோம். அவரது நடிப்பை ஓ மை கடவுளே உள்ளிட்ட பல படங்களில் பார்த்துள்ளேன். அவர் யதார்த்தமாக நடிக்கக் கூடியவர். அவரைப் போன்ற ஒருவர் தேவை என மனதில் வைத்து தான் அந்த கேரக்டரை உருவாக்கினேன்.

வாணி போஜன் கேரக்டர் இதுவா
இந்த படத்தில் வாணி நர்ஸ் ரோலில் நடிக்கிறார். அவரது கேரக்டர் படத்திற்கு மிகவும் முக்கியம். நல்ல வெயிட்டான ரோலும் கூட. மற்றொரு ஹீரோயின் யார் என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை. அழகான ஹீரோயின்களை விட அழுத்தமான கேரக்டர்கள்தான் இந்த படத்தை முன்னெடுத்து செல்லும். இன்னொரு ஹீரோயின் யார் என்பது பற்றி ஆலோசனை செய்து வருகிறோம் என்றார்.

அட இது தான் படத்தின் கதையா
இந்த படத்தின் ஷுட்டிங் சென்னையில் துவங்கி விட்டதாம். இது தவிர கிராமத்தில் நடைபெறுவதை போன்ற காட்சிகளும் உள்ளதாம். இவற்றை புதுப்பேட்டை பகுதியில் எடுக்க திட்டமிட்டுள்ளார்களாம். கிராமத்தில் வாழும் நபர் தன்னுடைய தேவைக்காக நகரத்திற்கு வருவதை போன்ற கதை. இது ரேக்லா ரேஸ் பற்றிய கதை அல்ல.

க்ளைமாக்சே இவ்வளவு நேரமா
பிரபுதேவாவின் கேரக்டர் ரேக்லா மாடுகளை பராமரிப்பது. இதில் தற்போது சமூக பிரச்சனைகளும் சேர்த்து சொல்லப்பட்டிருக்கும். க்ளைமாக்ஸ் காட்சிகள் 20 நிமிடங்கள் கொண்டதாக அமைக்கப்பட உள்ளதாம். பல விஷயங்களை வெளிச்சத்திற்கு கொண்டு வருவதாக இது அமைக்கப்பட்டிருக்கிறது என்றார் டைரக்டர். இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார்.

இதுலயாவது காட்டுவீங்களா
இதை கேட்டதும், எல்லாம் ஓகே தான். இந்த படத்திலாவது வாணி போஜன் நடிக்கும் காட்சிகளை காட்டுவீர்களா. இல்லை நீங்களும் மகான் படத்தை போல் வாணி போஜன் நடித்த காட்சிகளை நீக்கி விடுவீர்களா என ரசிகர்கள் கேட்டு வருகின்றனர். மகான் படத்தில் சிம்ரனை பிரிந்த விக்ரம், வாணி போஜன் சில காலம் வாழ்வதை போல் கதையை வைத்து படம் எடுத்தார்கள். ஆனால் படத்தின் நீளம் கருதி, வாணி போஜன் நடித்த காட்சிகளை நீக்கிவிட்டு, ஓடிடியில் படத்தை ரிலீஸ் செய்திருந்தனர். வாணி போஜன் வரும் சீன்களை பார்க்க ஆவலாக காத்திருந்த ரசிகர்கள் கடைசியில் ஏமாற்றம் அடைந்தனர்.