twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தெலுங்கு அமைப்புகளுடன் வடிவேலு சமரசப் பேச்சு?

    By Shankar
    |

    சென்னை: தெனாலிராமன் படம் பிரச்சினையின்றி வெளியாக வேண்டும் என்பதற்காக, தெலுங்கு அமைப்புகளுடன் வடிவேலு சமரசப் பேச்சு நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

    வடிவேலு நடித்துள்ள நாளை மறுதினம் திரைக்கு வரவிருக்கிறது தெனாலிராமன் திரைப்படம். சில ஆண்டு இடைவெளிக்கு பிறகு வடிவேலு நடிப்பில் பிரம்மாண்டமாக வெளிவரும் இத்திரைப் படத்திற்கு எதிர்ப்பார்ப்பு அதிகம் இருக்கிறது.

    Vadivelu negotiates with Telugu outfits

    இந்நிலையில் இந்த படத்திற்கு சில தெலுங்கு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. கிருஷ்ணதேவராயரை இழிவுபடுத்தி காட்சிகள் எடுக்கப்பட்டிருக்கின்றன என்று கூறி வருகிறார்கள்.

    படக் குழுவினரோ, அப்படி காட்சிகள் எதுவும் எடுக்கவில்லை என்கிறார்கள். அப்படியானால் படத்தை எங்களுக்கு திரையிட்டுக் காட்டுங்கள் என்கிறார்கள் தெலுங்கு அமைப்பினர். ஆரம்பத்தில் படத்தைத் திரையிட்டுக் காட்டுவதாகக் கூறிய இயக்குநர் யுவராஜ், இப்போது அதுபற்றி எதுவும் கூற மறுப்பதாக தெலுங்கு அமைப்புகள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

    படத்தை எங்களூக்கு திரையிட்டுக்காட்டாமல் ரிலீஸ் செய்தால், போராட்டம் நடத்துவோம் என்று தெலுங்கு அமைப்பினர் கூறுகின்றனர்.

    வடிவேலுவுக்கு எதிராக போராட்டம் செய்தால் நாங்கள் சும்மா இருக்க மாட்டோம் என்று சீமான் உள்பட பலர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    இந்த நிலைய்படம் திரைக்கு வர ஒரு நாள் மட்டும்தான் இருக்கிறது. இந்த மாதிரியான சூழ்நிலையில் சம்பந்தப்பட்டவர்களிடம் பேசி, சமரசம் ஆவதே நல்லது என்று முடிவெடுத்த வடிவேலு, ரெசிடென்சி ஓட்டலில் தெலுங்கு அமைப்பினர்களை சந்தித்து சமரசப் பேச்சு நடத்துவதாக தகவல் வெளியாகியுள்ளது.

    தெலுங்கு அமைப்பினரோ, எங்களுக்குப் படத்தை திரையிட்டுக்காட்டினால்தான் சமரசம் ஆவோம் என்று கூறி வருகிறார்களாம்.

    English summary
    According to reports, Vadivelu is negotiating with the Telugu people who protested against Tenaliraman.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X