Don't Miss!
- News "பாம் வச்சிருக்கோம்! சீக்கிரம் வெடிக்க போகுது!" சென்னை வி.ஆர்.மாலுக்கு வெடிகுண்டு மிரட்டல்!
- Lifestyle உங்கள் கால் நகங்களை அழகாக மாற்ற அற்புதமான டிப்ஸ்..
- Finance இனி பீட்சா முதல் பெப்சி வரை இவர்கள் கையில் தான்..!! வாரிசு கைக்கு மாறும் ஆர் ஜே கார்ப்பரேஷன்..!
- Technology கம்ப்யூட்டர் Keyboard: F மற்றும் J கீயில் மட்டும் கோடு இருப்பது ஏன்? இது தெரியாம டைப் செஞ்சா கேலி செய்வாங்க..
- Automobiles இவ்வளவு கம்மி விலையா? பஜாஜ் பல்சர் 400 பைக்கின் அறிமுக தேதி உறுதியானது!
- Sports சிஎஸ்கே அணிக்கு சிக்கல்.. பிளே-ஆஃப் வாய்ப்புக்கு ஆப்பு வைத்த 2 அணிகள்.. இனி என்ன செய்ய வேண்டும்?
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
முத்தத்துக்கு நிறம் உண்டா? - கவிஞர் வைரமுத்து சொன்ன அர்த்தமுள்ள பதில்!!
ரெட் ஜெயன்ட் மூவீஸ் சார்பில் உதயநிதி ஸ்டாலின் தயாரித்து, சீனுராமசாமி இயக்கியுள்ள நீர்ப்பறவை' படத்தின் பாடல்கள் வெளியிட்டு விழாவில் கவிஞர் வைரமுத்துவின் பேச்சு ஹைலைட்டாக அமைந்தது.
அவர் பேச்சின் 'முத்தப் பகுதி' மட்டும் இங்கே:
"நீர்ப்பறவை, கடலோர கிராமத்தில் நிகழும் கிறிஸ்தவ வாழ்வியல் சார்ந்த காதல் கதை. சீனுராமசாமி இந்த கதையை சொல்லி முடித்தவுடன், கதை வாசனை வீசுமாறு விவிலியச் சொற்களால் பாடல் எழுத வேண்டுமென்று ஆசைப்பட்டேன். பைபிளை மறுவாசிப்பு செய்தேன்.
கடவுளுக்கும், காதலுக்கும் ஒரு மெல்லிய வேறுபாடுதான் இருக்கிறது. சத்தியமும் ஜீவனுமாய் நானே இருக்கிறேன் என்ற வரி கர்த்தருக்கு மட்டுமல்ல, காதலுக்கும் பொருந்தும். அதனால்தான் 'என்னுயிரை அர்ப்பணம் செய்தேன். உன் பெயரை ஸ்தோத்திரம் செய்தேன். சத்தியமும் ஜீவனுமாய் நீயே நிலைக்கிறாய்' என்று காதலன் பாடுவதாக எழுதினேன்.
எனக்கு முன்னே பேசிய இயக்குனர் சீனுராமசாமி ஒரு பரீட்சை வைத்துவிட்டு போயிருக்கிறார். 'கிச்சு கிச்சுப் பண்ணும் கிறிஸ்துவப் பெண்ணே பச்சை முத்தம் போடவா' என்று எழுதியிருக்கிறீர்களே...பச்சை முத்தம்-சிவப்பு முத்தம் என்றெல்லாம் முத்தங்களுக்கு நிறம் உண்டா? கவிஞர்தான் விளக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்'' என்று இங்கு பேசினார். அதை விளக்குவது என் கடமை ஆகிறது.
பச்சை முத்தம்...
பச்சையென்றால் இங்கே நிறமல்ல. குணம். பெருந்தலைவர் காமராஜரை பச்சை தமிழர் என்று குறிப்பிடுவோம். பச்சை என்றால் அசல் என்று அர்த்தம். போலி முத்தம் போடாதே பெண்ணே. அசல் முத்தம் போடு என்று அதற்கு அர்த்தம். இது முதல் பொருள்.
பிறந்த குழந்தையைப் பச்சைக் குழந்தை என்பார்கள். அங்கே பச்சை என்பதற்கு புதிது என்று பொருள். இதுவரை எனக்கு முத்தமென்ற அனுபவம் இல்லை. இதுதான் முதல் முத்தம். அதனால் எனக்கு புத்தம் புதிய முத்தம் போடு என்பது இரண்டாவது பொருள்.
மூன்றாம் பொருள் ஒன்று உண்டு. அதுதான் முக்கியமான பொருள். அரைகுறை முத்தம் போடாதே. அது அழிந்துவிடும். பச்சை குத்துவது போல் நச்சென்று ஒரு முத்தம் போடு என்பது மூன்றாம் பொருள். இத்தனை அர்த்தம் தெரிந்தால்தான் முத்தம் ருசிக்கும்," என்றார்.