Just In
- 2 hrs ago
அக்ரிமென்ட்டை வைத்து மிரட்டியதா விஜய் டிவி? சுரேஷ் சக்கரவர்த்தியின் டிவிட்டல் ரசிகர்கள் ஷாக்!
- 2 hrs ago
'என்ன இவரும் இப்படி கிளாமர்ல இறங்கிட்டாப்ல..' வைரலாகும் நடிகை பூனம் பஜ்வாவின் 'ஜில்' போட்டோஸ்!
- 2 hrs ago
எனக்கு விழுற ஒவ்வொரு ஓட்டும் கப்புதான்.. ரன்னர் அப் பாலாஜியின் முதல் பதிவு.. என்னென்னு பாருங்க!
- 2 hrs ago
தனுஷுடன் மூன்றாவது முறையாக இணையும் தமன்னா... குஷியில் ரசிகர்கள்!
Don't Miss!
- News
தேனி ராஜா.. ஆசைப்பட்ட தமிழரசி.. உப்புக்கோட்டைக்கு சிட்டாய் பறந்து வந்து.. அங்க பாருங்க ஒரு டிவிஸ்ட்!
- Sports
32 ஆண்டுகளில் 3வது முறை... சொதப்பிய ஆஸ்திரேலியா... சாதித்த இந்திய இளம் வீரர்கள்!
- Finance
வரி சலுகைக்காக டெஸ்லா செய்த தில்லாலங்கடி வேலை.. எலான் மஸ்க் இது நியாயமா..?!
- Automobiles
தானாகவே ஓடும்... இந்தியாவிற்கு வரவுள்ள டெஸ்லா கார் பற்றிய இந்த விஷயங்களை உங்ககிட்ட யாரும் சொல்ல மாட்டாங்க...
- Lifestyle
Kumbh Mela 2021: மகா கும்பமேளா பற்றி தொிந்து கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்!
- Education
ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
சிவாஜி சிலைக்கு அடியில் கருணாநிதி பெயரைப் புதைத்துவிட்டார்களே...! - வைரமுத்து
இதுகுறித்து கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சிவாஜி கணேசனின் பெயரோடு கருணாநிதியின் பெயர் கலந்திருக்கிறது என்பது கலை உண்மை. சிவாஜி கணேசன் சிலையை கருணாநிதிதான் நிறுவினார் என்பது வரலாற்று உண்மை. இந்த இரண்டு உண்மைகளும் ஒரு சிலைக்கு அடியில் புதைக்கப்படுவதை தமிழ் உணர்வாளர்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். சிவாஜி கணேசன் பீடத்தில் இடம்பெற்றிருந்த கருணாநிதியின் பெயர் மீண்டும் பொறிக்கப்படவேண்டும்.

ஏன் எங்கள் மனதை நோகடிக்கிறீர்கள்? சூரியன் மீது ஏன் தாரடிக்கிறீர்கள்? சிலைதான் ஒரு மனிதனின் புகழுக்கு எல்லை என்பது இல்லை. சிலையும் ஒரு மூடநம்பிக்கை. இஸ்லாத்தில் சிலை வணக்கம் கிடையாது. அதனால் நபிகள் நாயகத்தின் பெருமையை யாரும் குறைத்துவிட முடியாது. சிலையே இல்லாவிட்டாலும் சிவாஜி கணேசன் சிவாஜி கணேசன்தான். ஆனால் நிறுவப்பட்ட சிலையில் நேர்மை இருக்கவேண்டும்.
தமிழ்நாட்டில்தான் சிலையே ஓர் அரசியல் ஆகிவிடுகிறது. சிலை அரசியலை ஒரு முடிவுக்கு கொண்டுவரவேண்டும். கன்னியாகுமரியில் கருணாநிதி ஆட்சியில் நிறுவப்பட்ட திருவள்ளுவர் சிலைக்கு அரசியல் பூச்சுப்பூசி அதற்கு ரசாயன பூச்சு பூசாமல் சிதையவிட்ட கதைகளையும் நாடறியும். சிலையை சிலையாக பார்க்கவேண்டும்; அரசியலாக பார்க்கக்கூடாது.

சிவாஜி கணேசன் சிலையை கடற்கரை காமராஜர் சாலையில் கருணாநிதி நிறுவியபோது அந்த சிலை திறப்பு விழாவில் கலந்துகொண்டு பேசியவர்களில் நானும் ஒருவன். அவர்பட்ட பாடுகள் அனைத்தையும் அருகிலிருந்து அறிந்திருக்கிறேன். சிலை மறுநிலை நாட்டம் செய்யப்பட்டாலும் அந்த சிலையோடு கருணாநிதியின் பெயரும் இடம் பெற்றிருக்கவேண்டும்.
ஏனென்றால் இடம்தான் மாறியிருக்கிறதே தவிர சிலை மாறவில்லை. கருணாநிதியின் பெயர் எப்படி விடுபட்டது? இதுதான் இடப்பெயர்ச்சியின் பலனா? கருணாநிதியின் திருப்பெயரை தமிழக அரசு அந்த பீடத்தில் கட்டாயம் இடம்பெற செய்யவேண்டும். அரசியலுக்கு அப்பாற்பட்டு இரண்டு பேரின் ரசிகனாக தமிழக அரசுக்கு நான் விடுக்கும் வேண்டுகோள் இது.
இவ்வாறு அவர் அறிக்கையில் கூறியுள்ளார்.