Don't Miss!
- News மஞ்சள் கலர் கல்யாண பத்திரிகை.. நாட்டை "ராவணன்" ஆண்டால் என்ன? பொண்ணு பேர் பார்த்தீங்களா? சபாஷ் நெல்லை
- Lifestyle எப்பவும் ஒரே மாதிரி சட்னி செய்யாம.. ஒருமுறை தீயில் சுட்ட தக்காளி சட்னியை செய்யுங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்..
- Sports ரூ.14 கோடி வீரருக்கு ஆப்பு.. லக்னோ பிட்சால் சிஎஸ்கே அணியில் நடக்கப்போகும் மாற்றம்.. ருதுராஜ் முடிவு!
- Technology ரூ.10,000 குள்ள 2.. ரூ.20,000 குள்ள 2.. Redmi-யின் 5 முரட்டு போன்கள் மீது.. வெயிட்டா ரூ.2000 டிஸ்கவுண்ட்!
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
யுவன் பற்றி இளையராஜா கணித்தது அப்படியே பலித்தது! - வைரமுத்து
யுவன் சங்கர் ராஜா குறித்து முன்பு ஒருமுறை இளையராஜா கணித்துச் சொன்னது அப்படியே பலித்தது, என்று கூறியுள்ளார் வைரமுத்து.
இடம் பொருள் ஏவல் படத்துக்காக இளையராஜாவின் மகன் யுவன் சங்கர் ராஜா இசையில் பாடல் எழுதுகிறார் வைரமுத்து.
இளையராஜாவால் பாடலாசிரியராக அறிமுகப்படுத்தப்பட்டவர் வைரமுத்து. காலத்தை வென்ற பல காவியப் பாடல்களைப் படைத்த இருவரும் கருத்து வேறுபாடு காரணமாகப் பிரிந்தனர்.
28 ஆண்டுகளுக்குப் பிறகு...
இளையராஜாவுடன் இணையாவிட்டாலும், 28 ஆண்டுகளுக்குப் பிறகு இளையராஜா குடும்பத்துடன் இணக்கமாகியிருக்கிறார் வைரமுத்து. இந்த இணக்கம் விரைவில் அவரை இளையராஜாவுக்கும் பாடல் எழுத வைக்கும் என இசை ரசிகர்கள் நம்புகின்றனர்.
ப்ளாஷ்பேக்
இந்த நிலையில், யுவன் சங்கர் ராஜா பற்றி ஒரு ப்ளாஷ்பேக் நிகழ்ச்சியைப் பகிர்ந்துள்ளார் வைரமுத்து.
அவர் கூறியிருப்பதாவது:
அப்போது இளையராஜா உஸ்மான் ரோடு வீட்டில் குடியிருந்தார். அந்த வீடு 'சிவகங்கைச் சீமை' காலத்தில், கண்ணதாசன் அலுவலகம். அவரை முதலில் நான் சந்தித்த வீடும் அதுதான்.
20 வயதிலேயே சாதிப்பான்
அந்த வீட்டில் இந்தப் பையன் (யுவன்) தவழ்ந்து விளையாடியபோது ஒருமுறை இளையராஜா சொன்னது இன்றும் என் நினைவில் உள்ளது. 'நான் 40 வயதில் அடைந்த புகழை, இந்தப் பையன் 20 வயதில் எட்டுவான்' என்றார்.
'பொன்குஞ்சாக நினைத்துப் பேசுகிறார்' என நினைத்தேன். ஆனால், அவரது கணிப்பு பின்னர் பலித்ததில், எனக்கு ஆச்சரியம்!," என்று கூறியுள்ளார் வைரமுத்து.
சகோதரி ஜீவா
மேலும் இளையராஜாவின் மனைவி மறைந்த ஜீவா குறித்தும் வைரமுத்து தன் நினைவுகளைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.
ஜீவா குறித்து கூறுகையில், "ராஜா குடும்பத்தில் என் மீது அதீத அன்பு காட்டியவர் அவரது துணைவியார், என் பாசத்துக்குரிய சகோதரி ஜீவா. அந்தச் சகோதரி கையால் பலமுறை உணவு அருந்தியவன் நான்.
பார்த்து மகிழ இல்லையே
அவர் என்னிடம் ஒருமுறை கேட்டார், 'அவரோடதானே உங்களுக்கு முரண்பாடு. என் மகனுக்குப் பாட்டு எழுத என்ன தயக்கம்?' என்று. அப்போது, 'இருக்கட்டும்மா... ஒரு காலம் வரும்' என்றேன். ஆனால், அந்தக் காலம் வரும்போது அதைப் பார்த்து மகிழ, சகோதரி இல்லாமல் போய்விட்டார்," என்று நெகிழ்ந்துள்ளார் கவிப்பேரரசு.