Don't Miss!
- News
"மைனஸ் 34 டிகிரி.." எலும்பை உறைய வைக்கும் குளிர்.. துடிக்கும் குழந்தைகள்.. ஆப்கனில் 162 பேர் பலி!
- Finance
எப்போ வேணாலும் அறிவிக்கலாம்.. பாகிஸ்தான் நிலை ரொம்ப மோசம்..!
- Lifestyle
உங்க பிறந்த தேதி 6,15 மற்றும் 24 இதுல ஒன்னா? அப்ப உங்க எதிர்காலம் எப்படி இருக்கப்போகுது தெரியுமா?
- Automobiles
இது இருக்குற வரைக்கும் மாருதியை அசைக்க முடியாது! காசை கொடுத்துவிட்டு காருக்காக தவம் கிடக்கும் 4.05 லட்சம் பேர்
- Technology
iPhone 15 சீரீஸ்: மொத்தம் 4 மாடல்கள்.. அனைத்திலுமே "இந்த" அம்சம் இருக்கும்.. என்னது அது?
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
- Sports
என்ன தெரிகிறது அங்கு??.. போட்டியின் போது அம்பயர் எராஸ்மஸ் செய்த காரியம்.. இணையத்தில் சிரிப்பலை!
- Education
TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!
ஆடுமேய்க்கப் போன இடத்தில் ஆளாகி வந்தவள்.. வைரமுத்துவின் அன்னம்மா பெத்தவளே பாடல் ரிலீஸ்!
சென்னை: பாடலாசிரியர் வைரமுத்துவின் நாட்படு தேறல் பருவம் 2ன் 4வது பாடலான "அன்னம்மா பெத்தவளே" பாடல் வெளியாகி உள்ளது.
"மூத்த குடியாள் மகள் ஆடுமேய்க்கப் போன இடத்தில் ஆளாகி வந்தது கண்டு அழுது பாடுகிறாள் இளைய குடியாள். ஒரு மகிழ்ச்சி இங்கே துக்கமாகிறது." என இந்த பாடல் குறித்த விளக்கத்தை கூறியுள்ளார் வைரமுத்து.
பாடலாசிரியர் வைரமுத்துவின் தயாரிப்பில் உருவாகி வரும் நாட்படு தேறல் 100 பாடல்களை உருவாக்க திட்டமிட்டுள்ளது. 100 இசையமைப்பாளர்கள், 100 பாடகர்கள் மற்றும் 100 இயக்குநர்கள் என வெவ்வேறு உள்ளடக்கங்களில் உலகத்தின் எல்லாப் பொருள் குறித்தும் பாடப்படும் பாடல்களாக இந்த நாட்படு தேறல் உருவாகி வருகிறது.

ஏழை வீட்டுப் பெண் வயதுக்கு வருவது அந்த வீட்டில் உள்ளவர்களுக்கு மகிழ்ச்சியை தராமல் மாறாக என்ன என்ன கண்ணீர் கதைகளை கொடுக்கின்றன என்பன குறித்து இந்த பாடலில் வைரமுத்து குறிப்பிட்டுள்ளார்.

வைரமுத்துவின் வரிகளில் உருவாகி உள்ள இந்த அன்னம்மா பெத்தவளே பாடலுக்கு அய்ஸ் நவ்ஃபாய் ராஜா என்பவர் இசையமைத்துள்ளார். இயக்குநர் கணேஷ் விநாயகம் இயக்கத்தில் உருவாகி உள்ள இந்த பாடலுக்கு வைக்கம் விஜயலட்சுமி தனது காந்தக் குரலை கொடுத்து பாடலுக்கு மேலும், அழகு சேர்த்துள்ளார்.
குழந்தை நட்சத்திரமான அபிநய ஸ்ரீ இந்த பாடலில் நடித்துள்ளார். சுகுமார் ஒளிப்பதிவில், லாரன்ஸ் கிஷோர் எடிட் செய்துள்ளார்.
மே 8ம் தேதியான இன்று இசையருவி தொலைக்காட்சியில் நண்பகல் 1.30 மணிக்கு இந்த பாடல் ஒளிபரப்பானது. கலைஞர் தொலைக்காட்சியில் மாலை 5.30 மணிக்கு ஒளிபரப்பானது. மேலும், வைரமுத்துவின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலிலும் இந்த பாடல் இடம்பெற்றுள்ளது.