நான் எந்த அணுகுண்டு கவிதையையும் எழுதலையே! - வைரமுத்து விளக்கம்
சென்னை: சமூக வலைத் தளங்களில் அணுகுண்டு கவிதை என்ற பெயரில் உலா வரும் கவிதையை நான் எழுதவில்லை என்று கவிஞர் வைரமுத்து விளக்கம் அளித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:.

'இது யாரோட இந்தியா' என்ற தலைப்பில் என் பெயரிட்டு சில வரிகள் சமூக ஊடகங்களில் உலா வருவதாக என் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டது. அதற்கும் எனக்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை என்பதை என்மீது அன்புகொண்ட அனைவருக்கும் தெரிவித்துக்கொள்கிறேன்," என்று அவர் கூறியுள்ளார்.
இதற்கு முன் கமல் ஹாஸன் பெயரில் ஒரு நீள் கவிதை வெளியானது. அந்தக் கவிதை நன்றாகவும் இருந்ததால், கமல் ஹாஸன்தான் எழுதியிருப்பாரோ என்று சிலர் நம்பினர். பின்னர் அதைத் தான் எழுதவில்லை என்று கமல் விளக்கம் அளித்தது நினைவிருக்கலாம்.


Click it and Unblock the Notifications











