Don't Miss!
- News சென்னை ஜிஎஸ்டி அலுவலகத்தில் அதிகாரிகள் இடையே மோதல்.. பாட்டிலால் தாக்கியதில் ஒருவர் காயம்! பரபர!
- Technology கைக்கு 2 ஆர்டர்.. அவ்ளோ கம்மி.. AMOLED டிஸ்பிளே.. ப்ளூடூத் காலிங்.. ஹெல்த் டிராக்கர்கள்.. எந்த மாடல்?
- Sports இதுதான் ரியல் ட்விஸ்ட்.. ஓய்வுக்கு பின் சிஎஸ்கே அணியின் முக்கிய பதவிக்கு வரப்போகும் தல தோனி?
- Finance ஜப்பானுக்கு இந்தியா தான் உதயசூரியன்.. கலரே மாறுதே.. சீனாவுக்கு பெரும் இழப்பு..!!
- Automobiles தண்ணீரை சேமிக்க இப்படி ஒரு வழியா? இனி ரயில்களில் 1லிக்கு பதிலாக 500 மிலி தண்ணீர் மட்டும் வழங்க முடிவு!
- Lifestyle கோடை காலத்தில் முட்டை சாப்பிடலாமா? கூடாதா? நிபுணர்கள் சொல்லுவது என்ன?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
சர்வைவர் இம்யூனிட்டி சேலஞ்சில் வென்ற வனேசா...பரிசாக என்ன கிடைச்சது ?
சென்னை : சர்வைவர் தமிழ் நிகழ்ச்சி ஜீ தமிழ் டிவி.,யில் ஒளிபரப்பாகி வருகிறது. உடல் மற்றும் மன வலிமையை சோதிக்கும் இந்த போட்டியில் 18 பேர் போட்டியாளர்களாக கலந்து கொண்டனர். இந்த போட்டி மொத்தம் 90 நாட்கள் நடைபெற உள்ளன. இதுவரை 7 பேர் எலிமினேட் ஆகி வெளியேறி உள்ளனர்.
5 மில்லியன் வியூசை கடந்த ஷிவாங்கியின் நோ நோ வீடியோ ஆல்பம்
இந்த நிகழ்ச்சி வெற்றிகரமாக 70 வது நாளை எட்டி உள்ளது. இதனை நடிகர் அர்ஜுன் தொகுத்து வழங்கி வருகிறார். உமாபதி, விக்ரந்த், சிருஷ்டி டாங்கே, விஜயலட்சுமி உள்ளிட்ட பிரபலங்கள் போட்டியாளர்களாக கலந்து கொண்டனர்.
சவால் விட்ட ஐஸ்வர்யா
இந்நிலையில் 70 வது நாளான நேற்றைய எபிசோடில் இம்யூனிட்டி சேலஞ்ச் நடத்தப்பட்டது. இதில் வனேசா அல்லது லேடிகாஷோ தனியாக நின்று ஜெயித்து காட்டட்டும் என ஐஸ்வர்யா சவால் விட்டார். இந்த சவாலை ஏற்று, இன்யூனிட்டி சேலஞ்ஜில் பங்கேற்றார் வனேசா.
க்ளூவை கண்டுபிடித்த இனிகோ
இம்யூனிட்டி ஐடல் க்ளூவை வைத்துக் கொண்டு விக்ராந்த்தும் இனிகோவும் தேடல் வேட்டைக்கு கிளம்பினார்கள். இனிகோ, ஒரு கட்டத்தில் மறைந்திருந்த குறிப்பைக் கண்டுபிடித்து விட்டார். ஆனால் அதில் எக்ஸ்பயரி தேதி இல்லை. "சூப்பர். அம்ஜத்தை முதல்ல தூக்கிட வேண்டியதுதான்" என்று இனிகோ உற்சாகப்பட "இதை நீயே பத்திரமா வெச்சுக்கோ" என்று இனிகோவிடம் கொடுத்து வைத்து விட்டார் விக்ராந்த்.
சவாலை விளக்கிய அர்ஜுன்
அர்ஜுன், இம்யூனிட்டி சவால் பற்றி விளக்க ஆரம்பித்தார். ஒரு seesaw பலகையின் மீது போட்டியாளர் பேலன்ஸ் செய்து ஏறி நிற்க வேண்டும். பிறகு தனது வலது கைபக்கத்தில் இருக்கும் ஏழு மரத்துண்டுகளை எடுத்து இடது பக்கத்தில் அடுக்க வேண்டும். இந்த வரிசை மூன்று விநாடிகளுக்கு மேல் நின்று விட்டால் அவர் வெற்றியாளர் என்று சொல்லி போட்டியை ஆரம்பிக்கத் துவங்கினார் அர்ஜுன்.
தள்ளாடிய போட்டியாளர்கள்
இதில் இனிகோவிற்கு ஆரம்பக்கட்டத்திலேயே வெற்றி கிடைத்தது. ஆனால் நாராயணனும் லேடிகாஷூம் இந்த ஆரம்ப முயற்சியிலேயே மிகவும் தள்ளாடினார்கள். விக்ராந்த், இனிகோ, லேடிகாஷ் போன்றவர்கள் ஐந்தாறு துண்டுகளை மட்டும் எப்படியோ அடுக்கி விட்டு சமாளிக்க முயன்றாலும் அது முடியவில்லை. அவை சரிந்து கீழே விழுந்தன.
சேலஞ்ச், வாளை வென்ற வனேசா
வனேசா ஏழு துண்டுகளையும் அடுக்கி வைத்து, மூன்று விநாடிகளுக்கு மேல் துண்டுகள் விழாமல் இருந்ததால் அவர் இந்த சவாலில் வெற்றி பெற்றார். வனேசாவை வாழ்த்திய அர்ஜுன், அவருக்கு இம்யூனிட்டி வாளை அளித்தார். இந்த வாரம் வனேசாவை யாரும் நாமினேட் செய்ய முடியாது.