Don't Miss!
- Finance ஹோம் லோன் வாங்க பெஸ்ட் பேங்க் இதுதான்.. ஏன் தெரியுமா..?
- News தமிழகத்தில் அதிக ஓட்டு பதிவான டாப் 10 தொகுதிகளில் 8 இடங்களில் பாஜக வேட்பாளர்கள் இல்லை - புதிய தகவல்
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
- Technology யாரும் நம்பமாட்றாங்க.. தென்கொரிய பெண்ணை ஏமாற்றினாரா எலான் மஸ்க்? 50,000 டாலருடன் எஸ்கேப்பானது யார்?
- Lifestyle மாம்பழம் வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... அப்பதான் ஏமாறாம நல்ல டேஸ்ட்டான பழமா வாங்கலாம்...!
- Automobiles அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
சமுத்திரக்கனி ஆணாதிக்கம் மிக்கவரா... என்ன சொல்ல வருகிறார் வரலட்சுமி?
ஆணாதிக்கம் பிடித்த தயாரிப்பாளர்களுடன் இணைந்து என்னால் பணியாற்ற முடியாது என்று கூறி, சமுத்திரக்கனியின் மலையாளப் படத்திலிருந்து நடிகை வரலட்சுமி விலகியுள்ளார்.
சமுத்திரகனி நடித்து, இயக்கி, தயாரித்து வெளிவந்த 'அப்பா' படம் தமிழில் நல்ல வெற்றியைப் பெற்றது. இப்படத்தை மலையாளத்திலும் சமுத்திரகனி ரீமேக் செய்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது. மலையாளத்தில் இப்படத்திற்கு 'ஆகாச மிட்டாய்' என்று தலைப்பு வைத்துள்ளனர்.
சமுத்திரகனி நடித்த கதாபாத்திரத்தில் ஜெயராம் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக வரலட்சுமி ஒப்பந்தமாகியிருந்தார்.
இப்போது படத்தில் இருந்து வரலட்சுமி விலகிவிட்டதாக திடீரென அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், "ஆணாதிக்கம், நற்பண்பு இல்லாத தயாரிப்பாளர்களுடன் பணியாற்றுவதற்கு என்னால் முடியாது," என்றார்.
படத்தை தயாரித்து இயக்குபவர் சமுத்திரக்கனிதான் என்பது குறிப்பிடத்தக்கது. ஆணாதிக்கம் மிகுந்தவர் என சமுத்திரக்கனியைச் சொல்கிறாரா அல்லது தனக்கு ஜோடியாக நடிக்கவிருந்த ஜெயராமைச் சொல்கிறாரா?
தன்னைப் புரிந்து கொண்டு, படத்திலிருந்து விலக அனுமதித்ததற்கு சமுத்திரக்கனி மற்றும் ஜெயராமுக்கு நன்றியையும் தெரிவித்துள்ளார் வரலட்சுமி. சொல்றத தெளிவாச் சொல்லிட்டுப் போகக் கூடாதா?!