அசோகமித்திரனின் தண்ணீர் நாவலைப் படமாக்கும் வசந்த்.. சுதா ரகுநாதன் இசை!

By Shankar

அசோகமித்திரன் எழுதிய தண்ணீர் நாவலை படமாக்குகிறார் இயக்குநர் வசந்த். இதன் பூஜை இன்று சென்னையில் தொடங்கியது.

கேளடி கண்மணி மூலம் இயக்குநராக அறிமுகமானவர் வசந்த். ஆசை, நேருக்கு நேர், ரிதம் போன்றவை அவரது குறிப்பிடத்தக்க படைப்புகளாகும்.

Vasanth's new movie Thanneer launched today

அவர் இயக்கத்தில் கடைசியாக வந்த படம் மூன்று பேர் மூன்று காதல். அந்தப் படத்துக்குப் பிறகு தற்போது தண்ணீர் எனும் புதிய படத்தை இயக்குகிறார்.

இந்தப் படத்துக்காக தன் பெயரை வசந்த் சாய் என்று மாற்றிக் கொண்டுள்ளார் வசந்த்.

Vasanth's new movie Thanneer launched today

இந்தப் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார் பிரபல கர்நாடக சங்கீத பாடகியான சுதா ரகுநாதன். இதற்கு முன் இளையராஜா இசையில் பாடல் பாடியுள்ளார் சுதா ரகுநாதன்.

தண்ணீர் என்ற பெயரில் பிரபல எழுத்தாளர் அசோகமித்திரன் எழுதிய நாவலைத்தான் அதே பெயரில் படமாக்குகிறார் வசந்த்.

Vasanth's new movie Thanneer launched today

இந்தப் படத்தின் தொடக்க விழா இன்று சென்னையில் நடந்தது. இயக்குநர் பாரதிராஜா, எழுத்தாளர் அசோகமித்திரன், சுதா ரகுநாதன் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X