Don't Miss!
- Technology புது கலர்.. அதே டிசைன்.. வாய்பிளக்க வைக்கும் விலை.. Nothing Ear மற்றும் Ear A அறிமுகம்.. ஏப்.22 முதல் விற்பனை!
- Automobiles காரை விட அவங்கதான் அழகா இருக்காங்க! விலை உயர்ந்த எலெக்ட்ரிக் வண்டியை வாங்கனது அவங்களா! சொக்கி போன ரசிகர்கள்!
- News நாங்க அப்பவே சொன்னோமே.. இவிஎம் பட்டனை தொட்டாலே பாஜகவுக்கு விழும் 2 ஓட்டு! காங்கிரஸ் புது டிமாண்ட்
- Finance Infosys: லாபத்தில் 30% உயர்வு, முதலீட்டாளர்களுக்கு ஸ்வீட் சர்ப்ரைஸ் ரூ.28 ஈவுத்தொகை..!
- Lifestyle 1 கப் கோதுமை மாவும் 1/2 கப் ரவையும் வெச்சு.. ஈவ்னிங் இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க... சூப்பரா இருக்கும்..
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Sports ஒரு பந்துக்கு 12 ரன் அடிக்க பார்க்காதே.. எவ்வளவு முறை சொல்றது? இளம் வீரருக்கு சூர்யகுமார் அட்வைஸ்
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
அசோகமித்திரனின் தண்ணீர் நாவலைப் படமாக்கும் வசந்த்.. சுதா ரகுநாதன் இசை!
அசோகமித்திரன் எழுதிய தண்ணீர் நாவலை படமாக்குகிறார் இயக்குநர் வசந்த். இதன் பூஜை இன்று சென்னையில் தொடங்கியது.
கேளடி கண்மணி மூலம் இயக்குநராக அறிமுகமானவர் வசந்த். ஆசை, நேருக்கு நேர், ரிதம் போன்றவை அவரது குறிப்பிடத்தக்க படைப்புகளாகும்.
அவர் இயக்கத்தில் கடைசியாக வந்த படம் மூன்று பேர் மூன்று காதல். அந்தப் படத்துக்குப் பிறகு தற்போது தண்ணீர் எனும் புதிய படத்தை இயக்குகிறார்.
இந்தப் படத்துக்காக தன் பெயரை வசந்த் சாய் என்று மாற்றிக் கொண்டுள்ளார் வசந்த்.
இந்தப் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார் பிரபல கர்நாடக சங்கீத பாடகியான சுதா ரகுநாதன். இதற்கு முன் இளையராஜா இசையில் பாடல் பாடியுள்ளார் சுதா ரகுநாதன்.
தண்ணீர் என்ற பெயரில் பிரபல எழுத்தாளர் அசோகமித்திரன் எழுதிய நாவலைத்தான் அதே பெயரில் படமாக்குகிறார் வசந்த்.
இந்தப் படத்தின் தொடக்க விழா இன்று சென்னையில் நடந்தது. இயக்குநர் பாரதிராஜா, எழுத்தாளர் அசோகமித்திரன், சுதா ரகுநாதன் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.