Don't Miss!
- Automobiles எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
‘செம்பரம்பாக்கம்’... படமாகிறது சென்னை வெள்ளம்.. இயக்குநர் வசந்தபாலன்... ஹீரோ அருள்நிதி!
சென்னை: இயக்குநர் வசந்தபாலனின் புதிய படத்தின் கதைக்களம் சென்னை வெள்ளம் பற்றியது என தகவல்கள் தெரிவிக்கின்றன.
வெயில், அங்காடித் தெரு, அரவான், காவியத்தலைவன் உள்ளிட்ட படங்களை இயக்கியவர் வசந்தபாலன்.
எதார்த்தமான அதே சமயம் மனதில் பதியும் படியும் மக்களின் வாழ்க்கையைப் படமாக்குவதில் பேர் போனவர் வசந்தபாலன்.
சென்னை வெள்ளம்...
இவர் தனது புதிய படத்திற்கு சென்னை வெள்ளத்தையும், அதன் பாதிப்புகளையும் கதைக்கருவாக எடுத்துக் கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
செம்பரம்பாக்கம்...
இந்தப் படத்திற்கு செம்பரம்பாக்கம் என அவர் பெயரிட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. அடையாறு கரையில் வசிக்கும் மக்களின் வெள்ளப் பாதிப்புகளைப் பற்றி இப்படம் பேச இருக்கிறதாம்.
அருள்நிதி...
இந்தப் படத்தில் அருள்நிதி நாயகனாக நடிக்க இருக்கிறாராம். தொடர்ந்து வித்தியாசமான வேடங்களில் நடித்து வரும் இவர் நடித்த ஆறாது சினம் இன்னும் சில தினங்களில் ரிலீசாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு...
மார்ச் மாத ஆரம்பத்தில் இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது. அப்போது படத்தின் நாயகி, மற்ற நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் பற்றிய விபரங்கள் தெரிய வரும்.