Don't Miss!
- News மஞ்சள் கலர் கல்யாண பத்திரிகை.. நாட்டை "ராவணன்" ஆண்டால் என்ன? பொண்ணு பேர் பார்த்தீங்களா? சபாஷ் நெல்லை
- Lifestyle எப்பவும் ஒரே மாதிரி சட்னி செய்யாம.. ஒருமுறை தீயில் சுட்ட தக்காளி சட்னியை செய்யுங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்..
- Sports ரூ.14 கோடி வீரருக்கு ஆப்பு.. லக்னோ பிட்சால் சிஎஸ்கே அணியில் நடக்கப்போகும் மாற்றம்.. ருதுராஜ் முடிவு!
- Technology ரூ.10,000 குள்ள 2.. ரூ.20,000 குள்ள 2.. Redmi-யின் 5 முரட்டு போன்கள் மீது.. வெயிட்டா ரூ.2000 டிஸ்கவுண்ட்!
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
திரைத் துளி
சென்னை:
காற்றுக்கென்ன வேலி திரைப்படத்திற்கு திரைப்பட தணிக்கை தீர்ப்பாயம் அனுமதியளிப்பது பற்றிய முடிவை தாமதித்தால் தணிக்கையின்றி படம்வெளியிடப்படும் என்று இயக்குநர் பாரதிராஜா எச்சரித்துள்ளார்.
பத்திரிக்கையாளரான இயக்குநர் புகழேந்தி இயக்கியுள்ள படம் காற்றுக்கென்ன வேலி. காயமடைந்த நிலையில் இலங்கையிலிருந்து தப்பி வரும் பெண்போராளி ஒருவருக்கும் அவருக்கு சிகிச்சையளிக்கும் டாக்டருக்கும் இடையே ஏற்படும் காதலைப் பற்றியதாகும்.
போராளியைப் பற்றிய கதை என்று திரைப்பட தணிக்கை வாரியம் இப்படத்தை பரிசீலனைக் கமிட்டிக்கு அனுப்பியது. அக்கமிட்டி அதனை தீர்ப்பாயத்திற்குஅனுப்பியது. தீர்ப்பாயம் இன்னும் படத்திற்கு அனுமதி வழங்கவில்லை.
போராளியைப்பற்றிய கதையல்ல, மனித நேயங்களை விளக்கவிரும்பும் ஒரு சித்திரமே இது என்கிறார் இயக்குநர் புகழேந்தி. படைப்பாளி தன் கருத்தைமக்களுக்கு சொல்ல முழு உரிமையுண்டு எனும் பாரதிராஜா, பிப்ரவரி 17க்குள் தீர்ப்பாயம் முடிவு சொல்லவில்லையெனில் திரைப்படம் தணிக்கையின்றிவெளியிடப்படும் என்றார்.
திரைப்படத் தயாரிப்பாளர்கள், மனித உரிமை அமைப்பினர்கள், மற்றும் எழுத்தாளர்கள் அடங்கிய நடவடிக்கை குழுவின் சார்பில் தமிழ்த் திரைப்படதயாரிப்பாளர்கள் மற்றும் தமிழ் திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் தலைவர் பாரதிராஜா இவ்வாறு அறிவித்துள்ளார்.
யு.என்.ஐ.