Don't Miss!
- Automobiles சாதாரணமாவே இந்த மாருதி காரை வீட்டுக்கு மளிகை சாமான் வாங்குற மாதிரி வாங்கிட்டு இருக்காங்க.. இதுல இது வேறையா!
- Lifestyle Today Rasi Palan 20 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பண விஷயத்தில் யோசித்து முடிவெடுப்பது நல்லது...
- News தென் சென்னையில் கள்ள ஓட்டு? பாஜக திமுக மாறி மாறி புகார்.. பெரும் பதற்றம்! என்ன நடக்கிறது
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
நாடே பெருமைப்படுகிறது! - ரஜினி மகள் ஐஸ்வர்யாவுக்கு வெங்கய்யா நாயுடு பாராட்டு!!
டெல்லி: ஐக்கிய நாடுகள் சபையில் ரஜினிகாந்தின் மகளும் தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யா நடனமாடியதற்கு அமைச்சர் வெங்கய்ய நாயுடு பாராட்டு தெரிவித்துள்ளார்.
நாடே பெருமை கொள்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஐநாவின் நல்லெண்ணத் தூதராக ஐஸ்வர்யா செயல்படுகிறார். அவர் ஐநா சபையின் மகளிர் தின நிகழ்ச்சியில் பரதநாட்டியம் ஆடியுள்ளார்.
ஐநா சபையில் இந்தியத் தூதரகத்தின் சார்பில் பரத நாட்டியம் ஆடிய முதல் பெண் என்கிற பெருமையை அவர் பெற்றுள்ளார்.
தனது பரதநாட்டியக் குழுவினரோடு நடராஜர் புஷ்பாஞ்சலி, வைரமுத்து எழுதிய அவசர தாலாட்டுப் பாடல், உலக அமைதிக்காக மறைந்த இசைக் கலைஞர் எம்.எஸ்.சுப்புலட்சுமி பாடிய பாடல் ஆகியவற்றுக்கு நடனமாடினார்.
பெண்களின் மகத்துவத்தை வெளிப்படுத்தும் வகையிலும் இந்திய கலாசாரத்தை உலகுக்குப் பறைசாற்றும் வகையிலும் இந்த நடன நிகழ்ச்சி, இந்திய தூதரகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்நிலையில், மத்திய நகர்ப்புற வளர்ச்சித் துறை மற்றும் மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு, ஐஸ்வர்யாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ட்விட்டரில் அவர் கூறியதாவது: 'மகளிர் தினத்துக்காக நியூயார்க்கில் ஐக்கிய நாடுகள் சபையில் ஐஸ்வர்யா நடனமாடியதற்கு வாழ்த்துகள். இந்தியா உங்களை எண்ணி பெருமைப்படுகிறது,' என்று கூறியுள்ளார்.