Just In
- 50 min ago
சத்தியமங்கலத்தில் ஷுட்டிங்.. வெற்றிமாறன் இயக்கும் படம்.. சூரி ஜோடியாக இவர்தான் நடிக்கிறாராமே?
- 9 hrs ago
அம்மாவ பத்தி ஏன் பேசின.. நான் ஒண்ணும் ஸ்கூல் பொண்ணு கிடையாது.. பாலாஜியை வெளுத்து வாங்கிய ஷிவானி!
- 9 hrs ago
தேவி தியேட்டரில் மாஸ்டர் படம் பார்த்த தளபதி விஜய்.. வைரலாகும் வீடியோ.. சந்தோஷத்தில் ரசிகர்கள்!
- 12 hrs ago
தளபதி விஜய்யின் மாஸ்டரை கையில் எடுத்த பிக் பாஸ் நிறுவனம்.. பாலிவுட்டில் ரீமேக் பண்ண போறாங்களாம்!
Don't Miss!
- News
கொரோனா தடுப்பூசி யாருக்கெல்லாம் போடப்படும்?.. பக்க விளைவுகள் என்ன?.. முழு விவரம்!
- Automobiles
இந்தியாவின் மலிவான க்ரூஸர் மோட்டார்சைக்கிள், பஜாஜ் அவென்ஜெர்ஸின் விலை அதிகரிப்பு!!
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 16.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் அவசர முடிவுகள் எடுக்காமல் இருப்பது நல்லது…
- Sports
அடுத்தடுத்த இடத்துல இருக்கற அணிகள் மோதும் 59வது போட்டி... வெற்றி யாருக்கு.. ரசிகர்கள் ஆர்வம்
- Finance
கலவரத்திற்கு முன் பிட்காயின் மூலம் பேமெண்ட்.. அமெரிக்காவில் நடந்த கொடூரம்..!
- Education
ரூ.1.13 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா? விண்ணப்பங்கள் வரவேற்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
நோட்டாவுக்கு ஓட்டு போட்டால் என்ன விபரீதம் நடக்கும்?: வெங்கட் பிரபு விளக்கம்
சென்னை: நாளை நடைபெற உள்ள தேர்தலில் நோட்டாவுக்கு அதிக அளவில் ஓட்டு போட்டால் என்ன விபரீதம் நடக்கும் என்பதை எடுத்துரைத்துள்ளார் இயக்குநர் வெங்கட் பிரபு.
நாளை லோக்சபா தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் நடக்க உள்ளதால் தமிழகத்தில் பரபரப்பாக உள்ளது. பிரச்சாரம் ஓய்ந்த நிலையில் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று மக்கள் ஒரு முடிவுக்கு வந்திருப்பார்கள்.
இவங்க யாருமே வேண்டாம் என்று நோட்டாவுக்கு வாக்களிக்கவும் பலர் தயாராகி இருப்பார்கள். இந்நிலையில் இயக்குநர் வெங்கட் பிரபு ட்விட்டரில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது,
ரூ. 2 கோடி கொடுத்தும் 'அந்த' விளம்பர படத்தில் நடிக்க மறுத்த சாய் பல்லவி?

5 ஆண்டுகள்
நாம் போடும் ஒவ்வொரு ஓட்டும் அடுத்த 5 வருஷத்திற்கு நாம் சுவாசிக்கும் காற்று, சாப்பாடு, தண்ணீர், எல்லாத்தையும் நிர்ணயிக்கப் போகிறது. வெறும் ரூ. 1000, ரூ. 2000 ஏன் ரூ. 1 லட்சம் அல்லது ரூ. 1.5 லட்சம் கொடுத்தால் கூட உங்களின் ஓட்டை விற்று விடாதீர்கள். உங்களிடம் காசு கொடுத்து ஓட்டு வாங்கும் அவர், தான் சம்பாதிக்க வேண்டும் என்று பார்ப்பாரா இல்லை உங்களுக்கு நல்லது செய்யணும் என்று பார்ப்பாரா?.

நோட்டா
இவர் சரியில்லை. இவரை விட அவர் ஊழல் ஜாஸ்தின்னு சொல்லி யோசித்துவிட்டு நோட்டாவுக்கு ஓட்டு போடுபவர்களுக்கு ஒன்று சொல்கிறேன். உங்க ஏரியாவில் நோட்டா ஜெயித்தது என்றால் நோட்டாவுக்கு அடுத்தபடியாக எந்த வேட்பாளர் ஜெயித்தாரோ அவரை தான் தேர்வு செய்து வெற்றி பெற்றவராக அறிவிப்பார்கள்.

ஏரியா
அவர் சரியில்லை இவர் சரியில்லை என்று. ஏன் அவரும், இவரும் தான் உங்க தொகுதியில் இருக்கிறார்களா? ஒரு படம் பார்க்கணும் என்றாலே 10 விமர்சனங்களை பார்த்துவிட்டு அதன் பிறகு டிக்கெட் எடுத்து படம் பார்க்கிறீர்கள். உங்க ஏரியாவில் உங்களை அடுத்த 5 வருஷத்துக்கு ஆளப் போறவங்க எப்படி இருக்க வேண்டும் என்று ஒரு 5 நிமிஷம் இன்டர்நெட்டில் போய் அவர்களின் கொள்கைகள், அவர்கள் எப்படி இருந்தார்கள், எப்படிப்பட்டவர்கள், என்ன செய்யப் போகிறார்கள் என்பதை கொஞ்சம் தெரிந்து கொண்டு ஓட்டு போடலாமே.

பெண்கள்
சின்ன வயதில் நாம் ரோட்டில் தான் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தோம். இப்போ, நம் குழந்தைகளை வெளியே அனுப்ப முடிகிறதா?. அவர்கள் டியூஷனுக்கு சென்றாலும் அவர்களுக்கு பாதுகாப்பாக பெண்களை அனுப்புகிறோம். அவர்களுக்கே இப்போ பாதுகாப்பு இல்லை. எங்கு பார்த்தாலும் தப்புத் தப்பான நியூஸ். ரொம்ப கஷ்டமாக இருக்கு.
|
நிஜம்
நான் அணிந்திருக்கும் டி-சர்ட்டில் சிக்ஸ் பேக் கமிங் சூன் என்று எழுதியிருப்பதில் எவ்வளவு பெரிய பொய் இருக்கிறது என்று உங்களுக்கே தெரியும் அல்லவா. அதே மாதிரி தான் உங்களின் வேட்பாளர் சொல்வதிலும் எவ்வளவு பொய், எவ்வளவு நிஜம் இருக்கிறது என்பதை கொஞ்சம் கவனமாக கேட்டால் உங்களுக்கே தெரியும். ஏப்ரல் 18 அன்று கண்டிப்பாக ஓட்டு போடுங்க, சரியான ஆளை பார்த்து ஓட்டு போடுங்க. நான் யார் என்று தேர்வு செய்துவிட்டேன், நீங்க என்று தெரிவித்துள்ளார் வெங்கட் பிரபு.