Don't Miss!
- News 3 உயிரை பறித்த சென்னை மதுபான விடுதி.. விபத்து நடந்தது எப்படி? ஆணையர் ராதாகிருஷ்ணன் கூறிய ஷாக் தகவல்
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
சத்தமில்லாமல் கல்வி சேவை...நடிகர் தாமுவிற்கு விருது வழங்கி கவுரவித்த மத்திய அரசு
சென்னை : மிமிக்ரி கலைஞரான தாமு, 1992 ம் ஆண்டு இயக்குனர் கே.பாலச்சந்தர் இயக்கிய 'வானமே எல்லை' படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். தொடர்ந்து பல ஹிட் படங்களில் நடித்து, புகழ்பெற்ற காமெடி நடிகராக இருந்து வருகிறார். விஜய்யின் 'கில்லி' உள்பட பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.
கையில் நாய்க்குட்டியுடன் குலுங்கி குலுங்கி ஓடி வரும் இலக்கியா.. திக்குமுக்காடும் இன்ஸ்டா!
விக்ரம், அஜித், விஜய் என முன்னணி நடிகர்கள் பலருடன் இணைந்து நடித்துள்ளார் தாமு. இவர் நடித்த ஜெமினி, அமர்க்களம், காதலுக்கு மரியாதை, கில்லி உள்ளிட்ட படங்கள் மெகாஹிட் படங்களாக இருந்துள்ளன.
10 ஆண்டு கால சமூக சேவை
கடந்த சில ஆண்டுகளாக படங்கள் எதிலும் நடிக்காத தாமு, பல சமூக பணிகளை மேற்கொண்டு வருகிறார். குறிப்பாக கல்வித் துறையில் இவர் பல சேவைகளை செய்து வருகிறார். தாமுவின் இந்த சேவையை பாராட்டி மத்திய அரசு விருது வழங்கி கவுரவித்துள்ளது.
மத்திய அரசு கெளரவம்
கல்வித் துறையில் கடந்த 10 ஆண்டுகளாக நடிகர் தாமு ஆற்றிய சேவைக்கு பாராட்டு தெரிவித்து தேசிய கல்வி வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சி மையம் தேசிய கல்வியாளருக்கான கெளரவ விருதான 'ராஷ்டிரிய சிக்ஷா கவுரவ் புரஸ்கார் 2021' என்ற விருதை அளித்துள்ளது.
கலாமால் நியமிக்கப்பட்ட தாமு
கல்வித் துறையில் சேவை செய்து வரும் தாமு, முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமால் கல்வித்துறைக்கு மாணவர்களின் வளர்ச்சிக்கு பயிற்சி அளிக்க நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தனக்கு கிடைத்த இந்த கௌரவ விருது குறித்து நடிகர் தாமு கூறுகையில், மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், நடிகர் விவேக்கை எப்படி பசுமைப் புரட்சியை ஏற்படுத்த நியமனம் செய்தாரோ, அதே போல் என்னை மாணவர்களின் வளர்ச்சிக்கு பயிற்சி அளிக்க நியமித்தார்.
பயனில்லாத ஆன்லைன் வகுப்புக்கள்
இந்தியா வளர்ச்சி அடைவதற்கு கலாம் பல்வேறு நபர்களை நியமித்து பொறுப்புகளை ஒப்படைத்து உள்ளார். தற்போதைய சூழ்நிலையில் ஆன்லைன் கல்வியால் மாணவர்களின் வளர்ச்சிக்கு பயனில்லை. இந்த கல்வி முறை 25 சதவீத மாணவர்களுக்கு மட்டுமே பயன் அளிக்கிறது. ஆனால் கொரோனா வைரஸ் காரணமாக வேறு வழியின்றி ஆன்லைன் கல்வி ஊக்குவிக்கப்படுகிறது என்றார்.
20 லட்சம் மாணவர்களுக்கு உதவி
தாமு, கடந்த 10 ஆண்டுகளில் 20 லட்சம் மாணவர்களின் கல்விக்காக உதவி உள்ளார். மத்திய அரசின் கெளரவ விருது பெற்ற நடிகர் தாமுவுக்கு திரையுலகினர் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். ஆன்லைன் மூலம் நடந்த விழாவில் இந்த விருது தாமுவிற்கு வழங்கப்பட்டுள்ளது.