தமிழர் அடையாளம் மறக்கப்பட்டு வருகிறது... கீழடியில் அமீர், ஜனநாதன், கரு.பழனிப்பன் வேதனை- வீடியோ
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் கீழடியில் தொல்லியல் ஆய்வு நடத்தப்பட்ட இடத்தை தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் எஸ்.பி.ஜனநாதன், அமீர் மற்றும் கரு.பழனியப்பன் ஆகியோர் நேரில் பார்வையிட்டனர். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்கள் மத்தியில் பேசிய அமீர், "தமிழர்கள் அடையாளம் கொஞ்சம் கொஞ்சமாக மறக்கப்பட்டு வருகிறது. ஜல்லிக்கட்டுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதேபோல கீழடியிலும் தமிழர்களின் பாரம்பரிய ஆதாரங்கள் பாதுகாப்பதில் மத்திய, மாநில அரசுகள் அலட்சியம் காட்டுவது சரியல்ல. கண்டெடுகப்பட்ட பொருட்களை காட்சிப்படுத்த, ஆய்வு செய்ய தேவையான இரண்டு ஏக்கர் நிலத்தை திரைப்பட இயக்குநர்கள் சார்பில் வாங்கித் தரவும் தயார்" என்றார்.
Comments


Click it and Unblock the Notifications