நா.முத்துக்குமாரின் மறைவு எழுத்துலகிற்கு மிகப்பெரிய இழப்பு: விக்ரமன்- வீடியோ
சென்னை: சென்னையில் மறைந்த பாடலாசிரியர் நா.முத்துக்குமாரின் உடல் வேலங்காடு மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. முன்னதாக திரையுலக பிரமுகர்கள் நா.முத்துக்குமாரின் உடலுக்கு மாலை வைத்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
அப்போது இயக்குநர் சங்கத் தலைவர் விக்ரமன் கூறியதாவது: நா.முத்துகுமாரின் பூதவுடல் மட்டும் தான் மறைந்துள்ளது. அவரது கவிதையுலகு என்றும் மறையாது. தமிழ் இருக்கும் வரை நா.முத்துக்குமாரின் வரிகள் இருந்து கொண்டே தான் இருக்கும். அவரது மறைவு தமிழ் திரையுலகிற்கு மட்டுமின்றி எழுத்துலகிற்கே மிகப்பெரிய இழப்பு என்று கூறினார்.


Click it and Unblock the Notifications











