Don't Miss!
- News தென் சென்னையில் கள்ள ஓட்டு? பாஜக திமுக மாறி மாறி புகார்.. பெரும் பதற்றம்! என்ன நடக்கிறது
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
ஒரு சாமானியனுக்குக் கிடைத்த விருது - தேசிய விருது பெற்ற பாடகர் சுந்தர் அய்யர் - வீடியோ
-சிறந்த பாடகர் என்ற தேசிய விருதைப் பெற்ற பாடகர் சுந்தர் ஐயர், எளிய குடும்பத்தில் இருந்து வந்த எனக்கு தேசிய விருது கிடைத்திருப்பதில் மகிழ்ச்சி. எந்த இசை பாரம்பரியமும் இல்லாமல் வந்தவர்களுக்கு தேசிய விரு
சென்னை: ஜோக்கர் படத்தில் 'ஜாஸ்மீன்' பாடலைப் பாடிய சுந்தர் அய்யருக்கு தேசிய விருது கிடைத்துள்ளது. இது ஒரு சாமானியனுக்குக் கிடைத்த விருது என சுந்தர் ஐயர் கூறியுள்ளார்.
64ஆவது தேசிய விருது, அறிவிக்கப்பட்டது. அதில் சிறந்த தமிழ்ப் படம் என்ற விருது ஜோக்கர் திரைப்படத்துக்குக் கிடைத்தது. அந்த படத்தில் 'ஜாஸ்மீனு' என்ற பாடலைப் பாடிய சுந்தர் அய்யர் என்பவருக்கு சிறந்த பாடகர் விருது கிடைத்துள்ளது.
இந்த விருது குறித்து பாடகர் சுந்தர் அய்யர் கூறியதாவது: நான் முதன்முதலில் பாடிய பாடலுக்கே விருது கிடைத்துள்ளது என்பது குறித்து மகிழ்ச்சி அடைகின்றேன். நான் சாமானிய குடும்பத்திலிருந்து வந்தவன். என் பெற்றோர்கள் விவசாயிகள். எந்த இசை பாரம்பரியமும் இல்லாத எனக்கு, முதல் பாடலுக்கே தேசிய விருது கிடைத்திருப்பது நம்பிக்கை அளிக்கிறது.
இந்த வாய்ப்பைக் கொடுத்த இசையமைப்பாளர் ஷான் ரோல்டனுக்கும் இயக்குநர் ராஜுமுருகனுக்கும் தயாரிப்பாளார் எஸ்.ஆர் பிரபுவுக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு தேசிய விருது பாடகர் சுந்தர் அய்யர் கூறினார்.