Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
திரைத் துளி
சென்னை:
சட்டசபைத் தேர்தலில் சுயேச்சையாகப் போட்டியிட மனுத்தாக்கல் செய்திருந்த நடிகர் விஜயகாந்த் ரசிகர்கள் பலர்போட்டியிலிருந்து விலகிக் கொண்டுள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டத்தின் பல பகுதிகளில் விஜயகாந்த் ரசிகர்கள் சிலர் தேர்தலில் போட்டியிட மனுச் செய்திருந்தனர்இதுகுறித்து விஜயகாந்த் ரசிகர்கள் மன்றத் தலைமைக்குத் தகவல் போனது. இதையடுத்து உடனடியாகபோட்டியிலிருந்து விலகிக் கொள்ளுமாறு மாநிலப் பொதுச் செயலாளர் வசந்தன் உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து போட்டியிலிருந்து விலகிக் கொள்வதாக தஞ்சாவூர் மாவட்ட விஜயகாந்த் ரசிகர் மன்றத்தலைவர் சங்கர் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், பேராவூரணி, ஓரத்தநாடு, திருவிடைமருதூர் ஆகியதொகுதிகளில் போட்டியிட ரசிர்கள் மனு செய்திருந்தனர்.
கட்சித் தலைமைக் கட்டளைப்படி தற்போது போட்டியிலிருந்து விலகிக் கொண்டுள்ளோம். விஜயகாந்த் ரசிகர்மன்றக் கொடி மற்றும் விஜயகாந்த் படத்தை அரசியல் தலைவர்கள் சிலர் பயன்படுத்துவதாக அறிகிறோம்.அவ்வாறு அவர்கள் செய்யக் கூடாது. அப்படிச் செய்தால் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுப்போம் என்றுகூறியுள்ளார்.